பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகிய கோபி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவியின் முக்கிய தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதிஷ் தற்போது சீரியலை விட்டு விலக உள்ளதாக வீடியோ ஒன்றனை வெளியிட்டுள்ளார்.
‘கோபி’ சதிஷ்:
பாக்கியலட்சுமி தொடர் ஆரம்பித்த புதிதில் எந்த வித வரவேற்பையும் பெறாமல், சுமாராக தான் சென்று கொண்டிருந்தது. அதன்பிறகு சிறிது நாட்களில் பாக்கியாவின் கணவரான கோபி கதாபாத்திரம் தனது பழைய காதலியை சந்திப்பது போல் கட்டினார்கள். அப்போது முதல் தான் சீரியல் களம் சூடு பிடித்தது. அந்த கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார்.
தமிழகத்தில் மின்தடை இல்லையா? மின் பயன்பாடு அதிகரித்தாலும் சமாளிக்க தயார்.. அமைச்சர் பேட்டி!
இந்த கேரக்டரில் நடிப்பதற்காக பலவிதமான எதிர்ப்புகளையும், பலரது கோபத்தையும் சதீஷ் பெற்றார். இது தான் தனது நடிப்பிற்கு கிடைத்த வெற்றியாக நடிகர் சதீஷ் கூறினார். இந்நிலையில், சீரியலில் பாக்கியா மற்றும் ராதிகா,கோபி அனைவரும் ஒரே வீட்டில் தங்குவது போல் காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதனால், மிகவும் சுவாரஸ்யமாகவும், அடுத்த கட்டம் குறித்து அதிக எதிர்பார்ப்புடனும் சென்று வருகிறது.
ஆனால் நடிகர் சதீஷ் பாக்கியலட்சுமி சீரியல் கோபி கதாபாத்திரத்தில் இருந்து தான் விலக இருப்பதாகவும், இன்னும் 10 அல்லது 15 நாட்களுக்கு பிறகான எபிசோடுகளில் இருந்து தான் தொடரில் இருந்து விலகுவதாகவும் கூறியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாகவும் அதில் தெரிவித்துள்ளார். கோபியின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.