ராதிகா மீது கைவைக்கும் கோபி, கடுப்பான மயூரி – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று பாக்கியா தனது மகன் செழியனுக்கு, ஜெனியிடம் பேச சொல்லி அறிவுரை வழங்குகிறார். செழியன் கோபியிடம் பேச நினைக்கும் போது கோபி எழுந்து சென்று விடுகிறார். இதனால் செழியன் சோகமாக இருக்கிறார்.
“பாக்கியலட்சுமி” சீரியல்
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா தான் செய்ய வேண்டிய குஜராத்தி வகை உணவுகள் குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிக்கிறார். பின், தனது மாமியார் மற்றும் மாமனார் பற்றி செல்வியிடம் பெருமையாக கூறுகிறார். அவர்கள் இருவரும் இனியாவை நன்றாக பார்த்துக் கொள்வதால் தான் தன்னால் தனது பிசினஸை பார்த்துக் கொள்ள முடிகிறது என்று கூறுகிறார். எழில் அம்ரிதாவின் வீட்டிற்கு செல்கிறார். அப்போது அம்ரிதாவின் அப்பாவிற்கு காலில் வலி ஏற்படுகிறது. அதற்கு எழில் ஒரு தைலத்தை எடுத்து வந்து அவருக்கு தேய்த்து விடுகிறார். இதனால் அம்ரிதாவின் அம்மா மற்றும் அப்பா இருவரும் நெகிழ்ந்து விடுகின்றனர்.
கண்ணன் காதலை ஏற்க மறுக்கும் முல்லை, ஐஸ்வர்யாவை மிரட்டும் பிரசாந்த் – இன்றைய எபிசோட்!
பின், கோபி ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு ராதிகாவுக்கு வீடு பத்திரத்தை மாற்றிக் கொடுத்து உதவுகிறார். இதனால் நெகிழ்ச்சி அடையும் ராதிகா அவருக்கு நன்றி தெரிவிக்கிறார். அப்போது கோபி எதார்த்தமாக ராதிகாவின் தோளில் கை வைக்கிறார். இதனை பார்க்கும் மயூரிக்கு கோபம் வந்து விடுகிறது. இதனால் கோபியை வெறுக்கவும் செய்கிறார். கோபிக்கும் இதனால் என்னவோ போல் ஆகி விடுகிறது.
IDBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய கட்டண விவரம் விளக்கம்!
பாக்கியா வீட்டில் எழில் மற்றும் செழியன் இருவரும் சாப்பிட அமர்கின்றனர். அப்போது செழியனை ஜெனியிடம் பேச சொல்லி பாக்கியா கூறுகிறார். ஜெனியை நன்றாக பார்த்துக் கொள்ளும் படியும் கூறுகிறார். இதனை கேட்டு செழியனுக்கு கோபம் வருகிறது. ஜெனி இன்னும் சின்ன குழந்தை போல நடந்து கொள்வதாகவும், இது தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறுகிறார். ஆனால் பாக்கியா செழியன் ஜெனியிடம் பேசாமல் இருப்பது தவறானது என்று கூறுகிறார். அப்போது கோபி சாப்பிட அமர்கிறார். அப்போது செழியன் கோபியிடம் பேச நினைக்கிறார். செழியனை பார்க்கும் கோபி தான் அப்பறமாக சாப்பிட்டு கொள்வதாக கூறி விட்டு சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.