கண்ணன் காதலை ஏற்க மறுக்கும் முல்லை, ஐஸ்வர்யாவை மிரட்டும் பிரசாந்த் – இன்றைய எபிசோட்!
இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் கஸ்தூரி வந்து திட்டியதும் வீட்டினர் அனைவரும் கண்ணனை கண்டிக்கின்றனர். மீனா, கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலிக்கின்றனரோ? என்று கூறுகிறார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று கண்ணன் பற்றி கஸ்தூரி, மூர்த்தியிடம் கூறுகிறார். வீட்டினர் கண்ணனிற்கு ஆதரவாக பேசினாலும் கஸ்தூரி கண்ணன் குடும்பத்தினர் நினைப்பது போல கிடையாது என்று கூறி விட்டு சென்று விடுகிறார். கஸ்தூரி சென்றதும் மூர்த்தி கண்ணனை நன்றாக திட்டி விடுகிறார். இனி ஐஸ்வர்யாவை சந்திக்க செல்ல கூடாது என்றும் திட்டவட்டமாக கூறி விடுகிறார். இதனால் கண்ணன் கவலையில் ஆள்கிறார். எப்படி வீட்டில் தனது காதலை பற்றி கூறுவது என்று யோசிக்கிறார்.
ஜூலை 26 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி – மாநில அரசு உத்தரவு!
பின், கண்ணனை கஸ்தூரி திட்டி சென்றதை நினைத்து தனம் வருந்துகிறார். வீட்டில் யாரும் தற்போது வரை இப்படி நடந்து கொண்டது கிடையாது என்றும் கண்ணன் தான் இப்படி நடந்து கொண்டான் என்றும் வருத்தத்துடன் மீனா மற்றும் முல்லையிடம் கூறுகிறார். அப்போது மீனா, கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒரு வேலை காதலிக்கின்றனரோ என்று சந்தேகம் கொள்கிறார். இதனை தனம் மற்றும் முல்லையிடமும் கூறுகிறார். இதனை கேட்டு தனம் அதிர்ச்சி அடைகிறார். பின், கண்ணன் அப்படிப்பட்ட ஆள் கிடையாது என்று முல்லை கூறுகிறார். கண்ணன் அனைவரிடமும் இப்படி தான் பழகுவதாக கூறுகிறார்.
மீனா கண்ணன் படித்து வேலையில் இருந்தால் கூட நாம் அவனுக்கு பெண் கேட்டிருக்கலாம் என்று கூறுகிறார். இதனை கேட்டு கோபப்படும் முல்லை, கஸ்தூரி குடும்பத்து பெண்ணே வேண்டாம் என்று கூறுகிறார். இவர்கள் பேசிய அனைத்தையும் தூரத்தில் இருந்து கேட்கும் கண்ணன் மொத்தமாக நொந்து போய் விடுகிறார்.
TN Job “FB Group” Join Now
பின், ஐஸ்வர்யாவிற்கு பிரசாந்த் போன் செய்கிறார். கண்ணனிடம் பேசும் ஐஸ்வர்யா அதனை கட் செய்து விடுகிறார். இதனால் கோபம் கொள்ளும் பிரசாந்த் தன்னிடம் மட்டுமே இனி பேச வேண்டுமே என்றும் தான் எப்போது போன் செய்தாலும் உடனடியாக அட்டென்ட் செய்ய வேண்டுமே என்று ஐஸ்வர்யாவை மிரட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.