சேலையை பார்த்து சந்தோசப்படும் பாக்கியா, அதே போல சேலை வாங்க செல்லும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகாவுக்கு வாங்கிய சேலையை பாக்கியாவிற்கு வாங்கியதாக சொல்லும் கோபி, பின்னர் அதே கடைக்கு சென்று அதே போல சேலை ராதிகாவிற்கு வாங்க செல்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி பாக்கியாவிற்கு சேலை வாங்கி கொடுத்ததால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். எழில் இனியா ஈஸ்வரி என எல்லார் முன்னாடியும் சேலை வாங்கி கொடுத்ததை காட்டுகிறார். இனியா சேலை நன்றாக இருக்கிறது என சொல்கிறார். பின்னர் சேலையின் விலையை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் ஈஸ்வரி. என்னாச்சு என கேட்க 11000 ரூபாய்க்கு சேலையா என அதிர்ச்சி அடைகிறார். பின்னர் ஈஸ்வரி தனது கணவரிடம் இத்தனை நாள் ஒரு புடவை வாங்கி தந்திருக்கிங்களா என கேட்கிறார்.
பின்னர் கோபி பாக்கியாவை பார்த்து ராதிகாவிடம் என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறார். செல்வி வந்ததும் முதலில் சேலையை காட்டி இனிமேல் என் புருஷனை எதுவும் சொல்ல கூடாது என சொல்கிறார். அந்த பொம்பளை பற்றி சொல்ல, அது அவர் நண்பரின் மனைவி என சொல்கிறார். இனிமேல் என் கணவர் பற்றி எதுவும் சொல்லாதே என சொல்கிறார். சேலையை கொடு அழுக்காக ஆகிறதே என சொல்கிறார். சேலையை வைத்து பார்க்கிறார் பாக்கியா.
இன்னைக்கு விடு என்னைக்காவது ஒரு நாள் தெரிய வரும் என செல்வி கிளம்புகிறார். சேலையை வைத்து பார்த்து பாக்கியா சந்தோசப்படுகிறார். பின்னர் கோபி கடைக்கு சென்று அதே போல சேலை வேண்டும் என கேட்கிறார். அங்கே வேலை செய்பவர் இருக்கிற எல்லா புடவையையும் காட்டுகிறார். அது எதுவும் இல்லை என கோபி சொல்ல அந்த புடவை போட்டோ இருக்கிறதா என வேலை செய்பவர் கேட்கிறார். கோபி போன் செய்து ஒரு உதவி செய்கிறாயா என கேட்கிறார்.
என்ன என்று கேட்க அந்த புடவை போட்டோ அனுப்பு என சொல்கிறார். புடவை கட்டி அனுப்பவா என கேட்க இல்லை என சொல்கிறார். எதற்கு என கோபி கேட்க, அந்த புடவைக்கு பிளவுஸ் எடுக்க வந்தேன் என சொல்கிறார். செல்வி இதை நம்புற மாதிரி இல்லை என சொல்ல, கோபி பாக்கியாவை திட்டிக் கொண்டிருக்கிறார். உடனே பாக்கியா போட்டோ எடுத்து அனுப்ப இந்த புடவை தான் என கோபி சொல்கிறார். அப்போது சேல்ஸ் பெண் அந்த மாதிரி சேலை இல்லை என சொல்கிறார். வேற கலர் காட்டவா என சொல்கிறார்.
பின்னர் வேறு கலர் புடவை எடுத்துக் கொண்டு ராதிகா வீட்டிற்கு செல்கிறார். ராதிகா சாரியை திறந்து பார்க்க வேறு கலர் புடவை இருக்கிறது. அதை பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைகிறார். கோபி என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார். இந்த புடவையோ வாங்குனோம் என ராதிகா சொல்ல, ஆமாம் என சொல்லி கோபி சமாளிக்கிறார். இல்லை கோபி அது வேற மாதிரி இருந்தது என ராதிகா சொல்ல கோபி என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.