கண்ணம்மாவிடம் இருந்து தப்பிக்கும் சௌந்தர்யா, வெண்பா அழகாக இருப்பதாக சொல்லி புகழும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
கண்ணம்மாவிடம் இருந்து தப்பிக்கும் சௌந்தர்யா, வெண்பா அழகாக இருப்பதாக சொல்லி புகழும் பாரதி - இன்றைய
கண்ணம்மாவிடம் இருந்து தப்பிக்கும் சௌந்தர்யா, வெண்பா அழகாக இருப்பதாக சொல்லி புகழும் பாரதி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
கண்ணம்மாவிடம் இருந்து தப்பிக்கும் சௌந்தர்யா, வெண்பா அழகாக இருப்பதாக சொல்லி புகழும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், அஞ்சலியின் வளைகாப்பிற்கு கண்ணம்மா வருவதை பார்த்து பாரதியும் சௌந்தர்யாவும் அதிர்ச்சி அடைகின்றனர். பின்னர் அகில் அஞ்சலி, பாக்கியா என அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா வருவதை பார்த்து சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார். மாடியில் இருந்து பாரதியும் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். லட்சுமியும் ஹேமாவும் ஓடி வந்து, ஹேமா கண்ணம்மாவையும், லட்சுமி சௌந்தர்யாவையும் கட்டிபிடித்துக் கொள்கின்றனர். அதை பார்த்து பாரதி அதிர்ச்சி அடைகிறார். பின்னர் சௌந்தர்யா கண்ணம்மா பேசாமல் இருக்க உள்ளே செல்ல, பாரதி இருப்பதை பார்த்து இப்போ எதுவும் கேட்க வேண்டாம் என கண்ணம்மா நினைக்கிறார்.

பின்னர் கண்ணம்மாவின் அப்பா வந்து லட்சுமியை கட்டி அணைத்து கொஞ்சுகிறார். அதை பார்த்து கண்ணம்மாவிற்கு சந்தோசமாக இருக்கிறது. பின்னர் அகில் அஞ்சலி வந்து கண்ணம்மாவை வரவேற்கின்றனர். உள்ளே சென்றதும் கண்ணம்மாவின் சித்தியும் கண்ணம்மாவை பார்த்து சந்தோஷத்தில் வரவேற்கிறார். நீயும் உன் மாமியாரும் தான் அஞ்சலியை அழைத்து வரணும் என கண்ணம்மாவின் சித்தி சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் அழகிய கூந்தலின் சீக்ரெட் – ரகசியத்தை வெளியிட்ட சுஜிதா!

பின்னர் சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு பயந்து தான் ஓடி வந்திருக்கேன். உடம்பு சரி இல்லை என கிளம்பிவிடுவோமா என திட்டமிடுகின்றனர். நாம கிளம்பிட்டால் அகில் அஞ்சலியிடம் கேட்பாள் என சொல்ல, விசேஷ வீட்டில் கண்ணம்மா கண்டிப்பாக கேட்கமாட்டாள் என வேணு சொல்கிறார். கண்ணம்மா அவர்களை பார்த்து கேட்க செல்ல பாரதி அங்கே வந்துவிடுகிறார். அதை பார்த்து கண்ணம்மா கேட்காமல் செல்கிறார். பாரதி அங்கிருந்து செல்ல கண்ணம்மா அத்தை என கூப்பிடுகிறார்.

அந்த நேரத்தில் வெண்பா அங்கே வந்து இறங்குகிறார். பின்னர் கண்ணம்மா கேட்க செல்ல வா அஞ்சலியை கூப்பிடுவோம் என சௌந்தர்யா அங்கிருந்து அழைத்து செல்கிறார். வெண்பா பாரதியை பார்த்து செல்ல கண்ணம்மாவும் சௌந்தர்யாவும் அவர்களை பார்த்துவிடுகின்றனர். அப்போது பாரதி கண்ணம்மாவை கடுப்பேத்த வெண்பா குடும்ப பெண் போல செம அழகாக இருக்க என பாரதி புலம்புகிறார். அதன் பின்னர் சௌந்தர்யா அஞ்சலியை கூப்பிட சென்று கண்ணம்மா கழுத்தில் எதுவும் போடாமல் இருப்பதை பார்த்து ஒரு நகை எடுத்து கொடுக்கிறார்.

பாரதி கண்ணம்மாவில் வரப்போகும் சீசன் 2 – ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!

நீ மாசமாக இருக்கும் போது வாங்கி வைத்தேன் என சொல்ல கண்ணம்மா வேண்டாம் என சொல்கிறார். ஆனால் அஞ்சலியும் போட சொல்ல அவள் ஆசைப்படுகிறார் என போட சொல்கிறார். உடனே கண்ணம்மாவிற்கு மாட்டி விட்டு பூ எடுத்து வைக்கிறார் சௌந்தர்யா சொல்கிறார். அதன் பின்னர் அஞ்சலியை அழைத்து கொண்டு சௌந்தர்யா கண்ணம்மா வர பாரதி கண்ணம்மாவின் நகையை ஒரு மாதிரி பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!