காசு இல்லாமல் தவிக்கும் கண்ணன், நகையை அடகு வைக்க சொல்லும் ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில்,கண்ணன் வீட்டிற்கு வர வீடு கரண்ட் பில் காட்டாமல் இருட்டாக இருக்கிறது. முல்லைக்கு இரவு பசிக்க கதிர் அவருக்கு முட்டை செய்து கொடுக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், லட்சுமி அம்மா கண்ணனை பார்க்க விருப்பமில்லை என சொல்கிறார். அதன் பின்னர் வீட்டிற்கு செல்ல கண்ணன் வீடு மட்டும் இருட்டாக இருக்கிறது. அவர் என்னாச்சு என தெரியாமல் உள்ளே செல்ல ஐஸ்வர்யா மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அமர்ந்திருக்கிறார். என்னாச்சு நம்ம வீட்டில் மட்டும் கரண்ட் இல்லை என சொல்ல வீட்டு உரிமையாளரிடம் போன் செய்து பேசுகிறார். ஆமாம் தம்பி கரண்ட் பில் கட்டவில்லை என சொல்லி நீங்களே கட்டிருங்க என சொல்கிறார்.
ஆனால் கண்ணனிடம் காசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார். பின்னர் முல்லை கதிரிடம் வீட்டில் யாரும் சரியாக சாப்பிடுவதில்லை என சொல்கிறார். நீங்க கூட சாப்பிடவில்லை என சொல்ல கதிர் நிறையா சாப்பிட்டு உடல் எடை அதிகமாகுது அதான் சரியாக சாப்பிடுவதில்லை என சொல்லி சமாளிக்கிறார். நான் வந்ததில் இருந்து அப்படியே தான் இருக்கேன் என கதிர் சொல்கிறார். பின்னர் இருவரும் தூங்க முல்லைக்கு பசிக்கிறது.
அவர் கதிருக்கு தெரியாமல் எழுந்து செல்ல கதிர் பார்த்துவிடுகிறார். என்னாச்சு என கேட்க பசிக்கிறது என சொல்கிறார். உடனே கதிர் எழுந்து சென்று முல்லைக்கு முட்டை செய்து கொடுக்கிறார். ஒரு பேச்சுக்கு வேண்டுமா என கேட்கிறாயா என சொல்ல எடுத்து சாப்பிடுங்க என முல்லை சொல்கிறார். அதை சாப்பிட்டு பார்த்து உப்பாக இருக்கிறது இதை எப்படி சாப்பிடுகிறாய் என கதிர் கேட்கிறார். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை என முல்லை சொல்லி அதை சாப்பிடுகிறார்.
பின்னர் கண்ணன் நண்பனிடம் பணம் கேட்க இல்லை என சொல்லிவிடுகிறார். உடனே ஐஸ்வர்யா யார் என கேட்க பிரவீனிடம் காசு கேட்டேன் இல்லை என சொல்லிவிட்டான் என சொல்கிறார். ஐஸ்வர்யா தான் அணிந்திருந்த செயினை கழட்டி கொடுக்கிறார். இதை வித்து அல்லது அடகு வைத்து கரண்ட் பில் கட்டலாம் என சொல்கிறார். கண்ணா வேண்டாம் என் அண்ணி கூட கழுத்தில் இருப்பதை அடகு வைக்கமாட்டாங்க என சொல்கிறார். ஐஸ்வர்யா வேறு வழியில்லை இன்னைக்கு நைட் நன்றாக தூங்கவேண்டுமே என சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் அழகிய கூந்தலின் சீக்ரெட் – ரகசியத்தை வெளியிட்ட சுஜிதா!
கண்ணா சரி என்று சொல்லி வாங்கிக் கொள்கிறார். தனம் லட்சுமி அம்மா நினைத்து கவலைப்பட கதிர் அங்கே வருகிறார். அம்மாவிற்கு சரியாகி விட்டது என சொல்கிறார். உடனே ஜீவா அங்கே வந்து ஆமாம் எதுவும் பிரச்சனை இல்லை இனிமேல் வீட்டிற்கு வந்து நன்றாக சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும் என சொல்கிறார். அதை கேட்டதும் தான் தனம் நிம்மதி அடைகிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.