பாக்கியாவிடம் கடுமையாக நடந்து கொண்ட கோபி,தாத்தாவிடம் கோபி பற்றி உண்மையை சொன்ன எழில் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா வர நேரமாகிவிட ராமமூர்த்தி சமையல் செய்கிறார். அப்போது பாக்கியா மீது கோபி கோவமாக இருக்க, சாப்பாடு வேண்டாம் என சொல்கிறார். அதனால் ராமமூர்த்திக்கு பிடிக்காமல் இருக்க இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என ஈஸ்வரி கேட்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாக்கு வேலை இருப்பதால் அவர் ஜெனியை வேலை பார்க்க வர சொல்கிறார். அந்த நேரம் பார்த்து பாக்கியா வர நான் சமைத்துவிட்டேன் என ராமமூர்த்தி சொல்ல, பாக்கியா வேகமாக ஓடி வருகிறார். அப்போது அனைவரும் சாப்பிட வர, செழியன் எழில் சாப்பாடு நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் கோபி சாப்பிட வராமல் இருக்க, இனியாவை அனுப்பி கோபியை வர சொல்கிறார் தாத்தா. கோபி எனக்கு பசிக்கவில்லை என்று சொல்ல ராமமூர்த்தி கோபப்படுகிறார். பாக்கியா அவளது இஷ்டத்துக்கு வருவாள் நான் பொறுமையாக இருக்க வேண்டுமா என கோபி சத்தம் போடுகிறார்.
ராமமூர்த்தி அவள் உன்னை போல தினமும் வருகிறாளா என கேட்க, கோபி சாப்பிடுகிறார். பின் கோபியை வம்பிழுப்பது போல பாட்டு பாட கோபி கோபப்படுகிறார். அதனால் ஈஸ்வரி நீங்க இருவரும் என்ன அடிக்கடி சண்டை போடுறீங்க உங்களுக்கு நடுவே என்ன பிரச்சனை என கேட்கிறார். அப்போது ராமமூர்த்தி உங்க மகனிடம் கேளு என சொல்கிறார். ஏன் என்னை அடிக்கடி பேசுறீங்க நீங்க உண்மையை சொல்லலாம் அல்லவா என கேட்கிறார். அப்போது ராமமூர்த்தி எனக்கு இந்த குடும்பத்தின் சந்தோசம் தான் முக்கியம் என சொல்கிறார். அதற்கு கோபி எனக்கு என் சந்தோசம் தான் முக்கியம் என சொல்கிறார்.
இப்படியே இருவரும் பேச, ஈஸ்வரி என்ன தான் பிரச்சனை என கேட்கிறார். ஆனால் இருவரும் சொல்லாமல் கிளம்புகின்றனர். அப்போது ஈஸ்வரி இருவருக்கும் என்ன பிரச்சனை என நினைத்து எனக்கு தலையே வலிக்கிறது என சொல்கிறார். எழில் அதெல்லாம் ஒன்றும் இருக்காது என சொல்லி சமாளிக்க பாக்கியா நான் கோபியிடம் சென்று என்ன என கேட்க இருப்பதாக சொல்கிறார். எழில் தாத்தா மாடியில் இருக்கும் போது அவரிடம் பேச செல்கிறார். அப்பாவிற்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை என கேட்க, அதை நீ தெரிந்து கொள்ள வேண்டாம் என சொல்கிறார்.
அப்போது எழில் எனக்கும் சில விஷயங்கள் எல்லாம் தெரியும் என சொல்ல, நீங்க அப்பாவிடம் நடந்து கொள்வது பார்த்து எனக்கு அதுவாக தான் இருக்கும் என சொல்கிறார். என்ன தெரியும் என கேட்க, அப்பாவிற்கு ஒரு லேடியிடம் பழக்கம் இருக்கிறது அது தான என கேட்கிறார். ஆனால் எழில் உனக்கு எப்படி தெரியும் என கேட்க, நான் இரண்டு முறை அதெல்லாம் பார்த்திருக்கிறேன் என சொல்கிறார். ராமமூர்த்தி அந்த பெண் யாரு என தெரியுமா என கேட்க தெரியாது என எழில் சொல்கிறார்.
அப்பறம் அந்த லேடியின் கணவர் நம்ம வீட்டிற்கு வந்தார் என சொல்ல இதை எல்லாம் ஏன் என்னிடம் சொல்லவில்லை என கேட்கிறார். இதெல்லாம் சொன்னால் நம்ம குடும்பத்தில் நிம்மதி போய்விடும் என்பதால் நான் சொல்லவில்லை என எழில் சொல்ல, அப்பாவிடம் இது பற்றி சத்தம் போட்டேன் ஆனால் அவர் இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் என என்னிடம் சத்தியம் செய்யததாக சொல்கிறார். அவனும் அவன் சத்தியமும் என ராமமூர்த்தி சொல்ல, எழில் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.