இனியா ஸ்கூலில் தவறாக நடந்து கொள்ளும் ஆசிரியர், கேள்வி கேட்ட பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
இனியா ஸ்கூலில் தவறாக நடந்து கொள்ளும் ஆசிரியர், கேள்வி கேட்ட பாக்கியா - இன்றைய
இனியா ஸ்கூலில் தவறாக நடந்து கொள்ளும் ஆசிரியர், கேள்வி கேட்ட பாக்கியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
இனியா ஸ்கூலில் தவறாக நடந்து கொள்ளும் ஆசிரியர், கேள்வி கேட்ட பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியாவிடம் ஸ்கூலில் ஆசிரியர் ஒருவர் தவறாக நடக்க அதை நினைத்து இனியா வருத்தப்படுகிறார். இனியாவின் மாற்றத்தை பார்த்து பாக்கியா கேள்வி கேட்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா ஸ்கூலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்க அப்போது தனது தோழி ஒருவர் வரட்டும் அப்பறம் சாப்பிடலாம் என சொல்கிறார். அப்போது அவர் தோழி ஒருவர் வருத்தமாக வருகிறார். என்ன நடந்தது என இனியா கேட்க, அந்த கம்ப்யூட்டர் சார் செய்வது பேசுவது எல்லாம் சரியாக இல்லை என சொல்கிறார். ஆமாம் எல்லாரிடமும் அவர் அப்படி தான் நடந்து கொள்கிறார் என சொல்ல நாம பிரின்சிபல் மேடம்யிடம் சொல்லிருவோமா என கேட்கிறார்.

தனம் கயலை பார்க்காததால் கோவத்தில் பேசிய மீனா, சமாதானம் செய்த மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அன்னைக்கு பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றதில் இருந்து பிரின்சிபல் மேடம் நம்மளை கண்டால் பிடிக்காமல் இருக்கிறார் என வருத்தப்பட்டு பேசுகிறார். பின் இனியாவிடம் அவர் தோழி பயத்துடன் பேசுகிறார். இனியா வீட்டிற்கு சோகமாக வர பாக்கியா என்ன ஒரு மாதிரி இருக்க என கேட்கிறார். இனியா வேகமாக வந்து ஈஸ்வரி மடியில் படுத்து தூங்குறார். அப்போது பாக்கியா ஸ்னாக்ஸ் கொடுக்க இனியா வேண்டாம் என சொல்கிறார். பாக்கியா எதாவது பிரச்சனையா என கேட்க, இல்லை தலைவலியாக இருக்கிறது என சொல்கிறார்.

இனியா தூங்க வர பாக்கியா போலீஸ் வந்தது அவரிடம் தைரியமாக பேசியதை பற்றி சொல்கிறார். ஆனால் இனியா அதை எல்லாம் கேட்காமல் வருத்தமாக இருக்க, என்ன ஆச்சு என கேட்கிறார். அம்மாவிடம் சொன்னால் எல்லார் முன்னாடியும் வந்து சண்டை போடுவார் என நினைத்து இனியா சொல்லாமல் இருக்கிறார். அப்போது பாக்கியா ஒன்றும் ஆகாது என சொல்லி தூங்க சொல்கிறார். மறுநாள் ஸ்கூலிற்கு வர அந்த தோழி அழுது கொண்டே இருக்கிறார்.

கண்ணம்மாவிடம் தாத்தா பாட்டி பற்றி கேட்ட லட்சுமி, பாரதியை உசுப்பேத்த வடிவின் மாஸ்டர் பிளான் – இன்றைய எபிசோட்!

இன்னைக்கும் என்னை எப்படி திட்டினார் என்று பார்த்தியா நேற்று அவர் எனக்கு போன் செய்தார் நான் அதை எடுக்கவில்லை அதனால் தான் என்னை இப்படி திட்டினார் என சொல்ல, மேடம் கிட்ட சொல்லுவோம் என இனியா சொல்கிறார். என்னுடைய போட்டோஸ் எல்லாம் அனுப்ப சொல்கிறார் என்று சொல்ல, இனியா உடனே வா என பிரின்சிபல் ரூமிற்கு கூட்டி செல்கிறார். அப்போது அங்கே அவர் இல்லை. அந்த நேரம் பார்த்து அந்த சார் வர எதற்கு இங்கே நிற்கிறீர்கள் என கேட்கிறார். உடனே பயந்து அவர்கள் சென்றுவிடுகிறார்கள். இனியா சோகமாக வீட்டிற்கு வர பாக்கியா இனியா சாப்பிட்டாளா என பார்க்கிறார் ஆனால் இனியா ஒன்றுமே சாப்பிடாமல் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!