கோபியை பார்த்து வருத்தப்படும் பாக்கியா, குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோபியை பார்த்து வருத்தப்படும் பாக்கியா, குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் செழியன் - இன்றைய
கோபியை பார்த்து வருத்தப்படும் பாக்கியா, குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் செழியன் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோபியை பார்த்து வருத்தப்படும் பாக்கியா, குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா வீட்டிற்கு வந்து அவரது அம்மா பேசியதை நினைத்து உள்ளே செல்லாமல் இருக்கிறார். பின் கோபி வருத்தமாக இருப்பதை பார்த்து பாக்கியா வருத்தப்படுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா வீட்டிற்கு வந்து காரை விட்டு இறங்குகிறார். அப்போது உள்ளே போக செல்ல, ராதிகா அம்மா பேசியது நினைவிற்கு வருகிறது. அதனால் உள்ளே போகாமல் வந்துவிடுகிறார். வீட்டில் அனைவரும் சந்தோசமாக இருக்க கோபி மட்டும் சோகமாக இருக்கிறார். அதை எல்லாம் பார்த்த பாக்கியா கோபியை நினைத்து வருத்தப்படுகிறார். பின் கோபி அலுவலகம் கிளம்பாமல் இருக்க, ஈஸ்வரி கோபி இன்னும் அலுவலகம் போகலையா என கேட்கிறார்.

அவன் என்ன சின்ன பையனா தேவை என்றால் அலுவலகம் போவான் என ராமமூர்த்தி சொல்கிறார். பின் கோபி ரூமிற்கு பாக்கிய செல்ல மனது சரி இல்லாமல் இருக்கிறது. அலுவலகம் லேட்டா தான் போவேன் என பாக்கியா சொல்கிறார். அதனால் வேகமாக கீழே வந்த பாக்கியா கோபிக்கு பிடித்த பூரி செய்கிறார். ஈஸ்வரி என்ன எல்லாருக்கும் இட்லி தான செய்தாய், அப்பறம் கோபிக்கு மட்டும் என்ன பூரி என கேட்கிறார். அவர் எப்போதும் அலுவலகத்திற்கு வேகமாக போவார் இன்னைக்கு தான் லேட்டா போவதாக சொல்லி இருக்கிறார்.

கண்ணன் வந்த சந்தோசத்தை வெளியே காட்டாமல் இருக்கும் மூர்த்தி- இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அதனால் பொறுமையாக சாப்பிடட்டும் என செய்தேன் என்று பாக்கியா சொல்கிறார். கோபிக்கு சாப்பாடு கொடுக்க அவர் எனக்கு பசி இல்லை என சொல்கிறார். ஆனால் பாக்கியா முடியாது நீங்க சாப்பிட்டால் தான் நான் போவேன் என சொல்ல, கோபி சாப்பிடுகிறார். செழியன் போனில் எதோ பார்த்துக் கொண்டிருக்க, ஜெனி வருவதை பார்த்து போனை மறைத்து வைக்கிறார். ஜெனி என்ன இது என கேட்கிறார். குழந்தைகள் புகைப்படத்தை பார்க்கிறாய் என கேட்க, ஆசை தான் என செழியன் சொல்கிறார்.

நாம குழந்தை பெற்றுக் கொள்வோமா என கேட்க, உன்னால் பெற்றுக் கொள்ள முடியாது என சொல்கிறார். பாப்பா இல்லாமல் போனதால் வருத்தமாக இருந்தது அதனால் உடனே குழந்தை வேண்டும் என எனக்கு தோன்றுகிறது என சொல்கிறார். சரி என ஜெனி சொல்ல எப்போ என செழியன் கேட்கிறார். உடனே பிறக்குமா என ஜெனி கேட்க, போ அலுவலகத்தில் வேலை இருக்கும் அதை பாரு என ஜெனி சொல்கிறார். கோபி ராதிகா உடன் இருந்ததை எல்லாம் நினைத்து பார்த்து வருத்தப்படுகிறார். அப்போது ஈஸ்வரி வர உடம்பு எதுவும் சரி இல்லையா என கேட்கிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை என கோபி சொல்கிறார்.

கண்ணம்மாவுடன் ஆறு மாதம் சேர்ந்து வாழமாட்டேன் என சொல்லும் பாரதி, புதிதாக வீட்டின் அருகே குடியேறும் வக்கீல் அக்கா- இன்றைய எபிசோட்!

அலுவலகம் கூட போகாமல் நீ இப்படி இருக்கமாட்ட என ஈஸ்வரி கேட்க, எதாவது என்னிடம் மறைக்கிறீயா என கோபி கேட்கிறார். கோபி பாக்கியாவை கூப்பிட அவள் வெளியே போயிருக்கா என ஈஸ்வரி சொல்கிறார். கோபிக்கு என்ன ஆச்சு என தெரியாமல் ஈஸ்வரி குழப்பத்தில் இருக்கிறார். பின் செல்வி பாக்கியா புதிய இடத்தில் பால் காய்ச்சுவது குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பெரிய பிரபலத்தை வைத்து தான் கடையை திறக்க வேண்டும் என செல்வி சொல்ல, பாக்கியா யோசிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!