வீட்டு வேலைகளை செய்யும் எழில், பாக்கியாவை கண்டபடி திட்டும் பாட்டி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
வீட்டு வேலைகளை செய்யும் எழில், பாக்கியாவை கண்டபடி திட்டும் பாட்டி - இன்றைய
வீட்டு வேலைகளை செய்யும் எழில், பாக்கியாவை கண்டபடி திட்டும் பாட்டி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
வீட்டு வேலைகளை செய்யும் எழில், பாக்கியாவை கண்டபடி திட்டும் பாட்டி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் வீட்டு வேலைகளை செய்து அனைவருக்கும் சாப்பாடு செய்து கொடுக்கிறார். பின்னர் கோபியும், ராதிகாவும் ஒன்றாக இருப்பதை ராஜேஷ் பார்த்துவிடுகிறார். எழில் துவைத்த துணிகளில் கறை இருப்பதால் அதை பார்த்து ஈஸ்வரி திட்டுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் பாட்டு போட்டுக் கொண்டு சந்தோசமாக வீட்டை துடைக்கிறார். அதன் பின்னர் வீட்டில் இருப்பவர்களுக்கு சாப்பாட்டிற்கு ஆம்லெட் போட்டு கொடுக்கிறார். பாட்டியும் தாத்தாவும் நன்றாக இருக்கிறது என சொல்லி சாப்பிடுகின்றனர். பின்னர் பாக்கியாவிற்கு சாப்பாடு கொண்டு போய் கொடுக்கிறார். அவரை எந்திரிக்கவிடாமல் எழில் கை கழுவ தண்ணீர் கொண்டுவந்து தருகிறார்.

பாக்கியா சாப்பிட்டுவிட்டு எழிலுக்கு ஊட்டி விடுகிறார். எழிலிருக்கு முக்கியமான போன் வர பாக்கியாவை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு அங்கிருந்து எழில் கிளம்புகிறார். ராதிகாவின் ஆபீஸ் சென்று கோபி சந்தித்து தனியாக பேசிக் கொண்டிருக்கின்றனர். தனது மனைவி சாப்பாடு கூட சமைத்து தரமாட்டார் என்று கோபி சொல்ல, ராதிகா பாக்கியா பற்றி சொல்கிறார்.

உதவு செய்ய மறுக்கும் ஜெகா, கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு ஆதரவு தரும் முல்லையின் அப்பா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

நம்ம தெருவில் தான் அவங்க வீடு இருக்கு நீங்க ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வந்து கொடுப்பார் என்று சொல்கிறார். அதெல்லாம் என் மனைவிக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என கோபி சொல்கிறார். அப்போது அங்கே ராஜேஷ் வந்து இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்துவிடுகிறார். ராஜேஷிற்கு பயங்கர கோவம் வருகிறது. பின்னர் கோபியும் ராதிகாவும் எழுந்து செல்கின்றனர்.

ஜெனி துவைத்த துணிகளை எடுத்து வந்து மடிக்க அமருகிறார். அப்போது துணிகளில் சாயம் இருப்பதை பார்த்து ஈஸ்வரி சத்தம் போடுகிறார். பாக்கியாவை சத்தம் போட்டு கூப்பிட பாக்கியா எழுந்து வர முடியாமல் வருகிறார். பாக்கியாவிடம் துணிகளை காட்டி கண்டபடி திட்டுகிறார். எழில் தெரியாமல் செய்திருப்பான் என்று சொல்ல அவனை எதற்கு வேலை பார்க்க சொன்ன என்று திட்டுகிறார். உடனே பாக்கியா அந்த துணிகளை எடுத்து வந்து மீண்டும் துவைத்து கறைகளை நீக்குகிறார்.

லட்சுமியை பாரதியிடம் விட்டு வரும் கண்ணம்மா, பிடிவாதத்தில் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

பாட்டியிடம் எல்லா கறைகளை போய்விட்டது என்று காட்டுகிறார். காலில் தான அடிபட்டிருக்கு உக்காந்து துணி கூட அலச முடியாத என்று பாட்டி கேட்கிறார். பின்னர் கோபி அலுவலக வேலையாக தனியாக நின்று கொண்டிருக்க அங்கே கோபியை பார்த்தபடி ராஜேஷ் நிற்கிறார். கோபி அவரை பார்த்து பதட்டமடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!