அமிர்தாவிடம் அப்பா பற்றி பேசி வருத்தப்படும் எழில், நல்ல மதிப்பெண் பெற்ற இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
அமிர்தாவிடம் அப்பா பற்றி பேசி வருத்தப்படும் எழில், நல்ல மதிப்பெண் பெற்ற இனியா - இன்றைய
அமிர்தாவிடம் அப்பா பற்றி பேசி வருத்தப்படும் எழில், நல்ல மதிப்பெண் பெற்ற இனியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
அமிர்தாவிடம் அப்பா பற்றி பேசி வருத்தப்படும் எழில், நல்ல மதிப்பெண் பெற்ற இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் தாத்தாவிடம் எங்கே போனீங்க என கேட்க, தாத்தா எதோ சொல்ல வருகிறார். அப்போது எழில் அமிர்தாவிடம் அப்பாவை பற்றி பேசி வருத்தப்படுகிறார். பின் ஈஸ்வரி கோபியிடம் அப்பாவை பற்றி பேசி வருத்தப்பட கோபிக்கு அவர் ராதிகாவை தேடி போன உண்மை தெரிய வருகிறது

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் தாத்தாவிடம் வந்து இந்த போட்டோ நீங்க விழுந்து கிடந்த இடத்தில் இருந்தது என சொல்ல, தாத்தா எதோ சொல்ல வருகிறார். அப்போது தாத்தா ரொம்ப கோவமாக இருப்பதை பார்த்து எழில் சரி விடுங்க என சொல்கிறார். மறுபக்கம் எழில் அப்பாவால் தாத்தா இன்று வெளியே சென்றுவிட்டார். அப்பா ஏன் இப்படி குடும்பத்தை பற்றி நினைக்காமல் இருக்கிறார் என சொல்லி வருத்தப்படுகிறார். அப்போது அமிர்தா நெஞ்சில் சாய்த்து வைத்து ஆறுதல் சொல்ல அப்போது அம்மா வந்துவிடுகிறார்.

TN Job “FB  Group” Join Now

அமிர்தா எழிலை தோளில் சாய்த்து வைத்திருப்பதை பார்த்து அவர் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார். அமிர்தா நான் காபி கொண்டு வருகிறேன் என உள்ளே செல்ல, அப்போது அம்மாவும் உள்ளே வருகிறார். அவரிடம் அமிர்தா அவர் பேசியது எனக்கு வருத்தமாக இருக்கிறது அதனால் தான் தோளில் சாய்த்துக் கொண்டேன் என சொல்ல, அவன் நம்ம கூடவே இருக்க வேண்டும் என நான் நினைக்கிறன் ஆனால் அதுக்காக மிகவும் ஆசைப்பட கூடாது அவருக்கு குடும்பம் இருக்கிறது என சொல்கிறார். கோபி வீட்டிற்கு வர ஈஸ்வரி தாத்தாவை நினைத்து வருத்தமாக பேசுகிறார்.

அவர் ஏன் வெளியே சென்றார் என தெரியவில்லை என்று சொல்ல, ஒரு வேளை ராதிகா தேடி சென்றிருப்பாரோ என நினைக்கிறார். அப்போது கோபி அப்பா எங்கே இருந்தார் என கேட்க, ராதிகா வீட்டு தெருவில் தான் என சொல்கிறார். கோபி அதை கேட்டு பதட்டம் அடைகிறார். பின் இனியா வர நாளைக்கு ரிசல்ட் வருகிறது அதை நினைத்தால் பயமாக இருப்பதாக சொல்கிறார். அதெல்லாம் ஒன்றும் ஆகாது என கோபி தைரியம் சொல்ல இனியா பயத்துடன் இருக்கிறார். மறுநாள் பாக்கியா அடுப்படியில் இருக்க சாமி கும்பிடும் சத்தம் கேட்கிறது.

டாக்டரை சந்தித்த கதிர், முல்லை, தனம், செலவை நினைத்து வருத்தப்படும் மீனா – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

யார் என அனைவரும் வந்து பார்க்க இனியா சாமி கும்பிட்டு இருக்கிறார். அப்போது எல்லாரும் பார்த்து நக்கலடித்து சிரிக்கிறார். கோபி ஆபிஸ் கிளம்ப இனியா அவருடன் இருக்க சொல்கிறார். மறுபக்கம் இனியாவின் ரிசல்ட் எழில் பார்த்துவிடுகிறார். வீட்டில் அனைவரும் பதட்டத்துடன் இருக்க செழியன் ரிசல்ட் பார்க்கிறார். அப்போது அதில் இனியா நிறைய மார்க் வாங்கி இருப்பதாக வருகிறது. அதை பார்த்து குடும்பமே சந்தோசப்பட எழில் லட்டு வாங்கி கொண்டு வந்து கொடுக்கிறார். குடும்பமே இனியாவை நினைத்து சந்தோசமாக இருக்கிறது, அமிர்தாவும் அவரது அப்பாவும் கடைக்கு போக அமிர்தாவை ஒருவர் கிண்டல் செய்கிறார். அமிர்தா அப்பா எதிர்த்து பேச அவரை அடித்துவிட்டு அமிர்தா கையை பிடிக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!