குடித்துவிட்டு வந்த கோபி, போதையில் உண்மையை உளற அதிர்ச்சியில் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார் என கோபியின் நண்பர் பாக்கியாவிடம் சொன்னதை அடுத்து பாக்கியா கோபிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது எழில் வர கோபி நிதானம் இல்லாமல் தள்ளாடி கொண்டே வருகிறார். பாக்கியா அவரை படுக்க வைக்க அப்போது பாக்கியாவை பிடிக்கவில்லை எனவும் எனக்கு நீங்க இருவர் தான் முக்கியம் என கோபி சொல்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி குடித்துவிட்டு வண்டி ஓட்ட முடியாமல் வந்ததாக சொல்ல பாக்கியா கோபி வருவார் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார். பாக்கியா கோபியை தேடி வாசலில் நிற்பதும், கோபி நல்லபடியாக வர வேண்டும் என சாமி குடும்பிடுவதுமாக இருக்கிறார். அப்போது எழில் வர நீண்ட நேரமாகியும் ஏன் தூங்காமல் இருக்கிறாய், அப்பா எப்போதும் நேரமாக தான வருவார் அவர் வந்தால் நான் கதவை திறந்துவிடுகிறேன் நீ சென்று படு என சொல்கிறார். ஆனால் பாக்கியா எதுவும் சொல்ல முடியாமல் மிகவும் சோகமாக இருக்கிறார்.
TN Job “FB Group” Join Now
அப்போது பாக்கியா அப்பாவின் நண்பர் செந்தில் போன் செய்தார் அவர் என்ன சொன்னார் தெரியுமா என கேட்க அப்போது கோபியின் வண்டி சத்தம் கேட்கிறது. கோபி வண்டியை நிறுத்திவிட்டு தள்ளாடிக் கொண்டே வீட்டிற்குள் வருகிறார். அப்போது பாக்கியா எழில் அவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். எழில் அம்மா அப்பா குடித்துவிட்டு வந்திருக்கிறார் என சொல்ல கோபி நிதானம் இல்லாமல் வர எழில் அவரை பிடித்து ரூமில் படுக்க வைக்கிறார். அப்போது பாக்கியா அவருக்கு துடைத்துவிட கோபி என்னை தொடாதே நல்ல மனைவி போல இருக்க நினைக்கிறாயா என கேட்கிறார்.
உன்னை எனக்கு பிடிக்கவில்லை இப்போது இல்லை எப்போதுமே உன்னை எனக்கு பிடிக்கவில்லை என சொல்கிறார். கல்யாணம் முடிந்த அன்று முதல் எனக்கு உன்னை சுத்தமாக பிடிக்கவில்லை என சொல்ல உடனே பாக்கியாவிற்கு வருத்தமாக இருக்கிறது. பின் கோபி தூங்கிவிட துக்கத்தில் எனக்கு நீங்க இரண்டு பேரும் தான் முக்கியம் நீங்க இல்லையென்றால் நான் உயிரோடு இருக்க மாட்டேன். உங்களுக்காக என் குடும்பத்தை விட்டு வர தயாராக இருந்தேன் ஆனால் இப்போது நீங்க இப்படி என்னை வேண்டாம் என சொன்னால் என்னால் தாங்க முடியாது என சொல்கிறார்.
பின் பாக்கியா அதை எல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பாக்கியா கோபியை நினைத்து ஒரு பக்கமும் ராதிகா பாக்கியா தான் கோபியின் மனைவி என தெரிந்து கொண்டு ஒரு பக்கமும் வருத்தத்துடன் இருக்கிறார். மறுநாள் கோபி சொன்னதை நினைத்து பாக்கியா வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் அப்போது எழில் வர அப்பா இது போல இதற்கு முன் குடித்து இருக்கிறாரா என கேட்க இல்லை என பாக்கியா சொல்கிறார். பின் எழில் அப்பாவிற்கு என்ன பிரச்சனை என கண்டுபிடிக்க வேண்டும் என சொல்கிறார்.
அதை எல்லாம் செல்வி கேட்க சார் குடித்துவிட்டு வந்தாரா அவருடைய நடவடிக்கை எதுவும் சரி இல்லை என சொல்கிறார். பாக்கியா அவர் தூக்கத்தில் என்னை பிடிக்கவில்லை என சொன்னார். பின் யாரோ இருவர் இல்லாமல் இருக்க முடியாது என புலம்பியதாக இருக்க அப்போது செல்வி அப்போ சாருக்கு ஒரு பெண்ணுடன் இல்லை இரு பெண்ணுடன் தொடர்பு இருக்கும் போல என சொல்ல பாக்கியா அப்படி எல்லாம் பேசாதே என் சொல்கிறார்.