செப்டம்பர் இறுதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – டெல்டா பரவல் எதிரொலி!

0
செப்டம்பர் இறுதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு - டெல்டா பரவல் எதிரொலி!
செப்டம்பர் இறுதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு - டெல்டா பரவல் எதிரொலி!
செப்டம்பர் இறுதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – டெல்டா பரவல் எதிரொலி!

ஆஸ்திரேலியாவின் முக்கியமான நகரங்களில் ஒன்றான சிட்னியில் டெல்டா கொரோனா வகை வைரஸ் பாதிப்பு பெருகிக்கொண்டு வருவதால் இவை மேலும் தீவிரமடையும் போது செப்டம்பர் மாத இறுதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

பொதுமுடக்கம்:

ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சிட்னியில் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு பாதிப்புகள் தீவிரமடைந்து வருகிறது. அதாவது சிட்னியில் முதன் முதலாக பரவத் துவங்கிய டெல்டா வைரஸ் பாதிப்பானது மெல்ல நகர்ந்து மெல்போர்ன், நியூ சவுத் வேல்ஸ் நகரில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் நியூ சவுத் வேல்ஸ் நகரிலும் புதிய பாதிப்புகள் தற்போது வேகமெடுத்துள்ளது. இப்பகுதியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 642 புதிய பாதிப்புகள் மற்றும் 4 இறப்புகள் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 23க்கு பிறகு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!

அதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சில எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி உடற்பயிற்சி செய்யும் நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் நகரின் மேயர் பெரெஜிக்லியன் கூறுகையில், ‘நாடு முழுவதும் தடுப்பூசி விகிதங்களை உயர்த்தும் வரை கொரோனாவில் இருந்து உயிர்களைப் பாதுகாப்பதற்காக மக்கள் அனைவரும் இதனை கடந்து செல்லுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’ என கூறியுள்ளார்.

10ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் – தமிழக அரசு அறிவிப்பு!

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவின் 26 மில்லியன் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மெல்போர்ன் நகரில் ஊரடங்கு கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர். மேலும் விக்டோரியா மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சிட்னி நகரில் கடந்த 2 மாதங்களாக பொது முடக்கம் தொடர்பான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்த நிலை மேலும் தொடர்ந்தால் சிட்னி நகரில் செப்டம்பர் இறுதி வரை முழு முடக்கம் அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. இதுவரை ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையில் 22% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!