ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிப்பு -கொரோனா தொற்று தீவிரம் எதிரொலி!
கொரோனாவின் டெல்டா வகை வைரஸ் தாக்கம் ஆஸ்திரேலியா நாட்டில் அதிகரித்து வருவதால், அங்கு மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு கொரோனவை கட்டுப்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு தீவிரமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
ஊரடங்கு நீட்டிப்பு
ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தாக்கம் மிகவும் அதிகமாக இருந்து வந்தது. இதன் காரணமாக அங்கு தீவிரமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. பின்னர், தளர்வுகள் அழைக்கப்பட்டதும், கொரோனா வைரஸ் உருமாறி டெல்டா வைரஸாக பரவியது. இந்த நிலையினை கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்த நாட்டு அரசு ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
ரேஷன் கடைகளில் மீண்டும் ‘டோக்கன்’ சிஸ்டம் – மாவட்ட நிர்வாகம் திட்டம்!
ஆஸ்திரேலியாவின் பெரிய நகரமான மெல்போர்ன் மற்றும் அதை சுற்றியுள்ள விக்டோரியா மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவுகள் யாரும் வியாழக்கிழமை உடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ளது. அதனால் தற்போது ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவினை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று மாநில பிரிமியர் டான் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும், அவர் கூறியதாவது, ‘ஊரடங்கு உத்தரவினை திரும்ப பெற வேண்டும் என்று தான் நாங்களும் நினைக்கிறோம். ஆனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை காரணமாக இந்த முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்குக்கு முன்பான சுதந்திரத்தை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறோம். மீண்டும் அந்த நாள்கள் திரும்பு வர வேண்டும் என தீவிரமாக விரும்புகிறோம்’ இவ்வாறாக தெரிவித்துள்ளார்.