ரேஷன் கடைகளில் மீண்டும் ‘டோக்கன்’ சிஸ்டம் – மாவட்ட நிர்வாகம் திட்டம்!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலின் போது ரேஷன் கடைகளில் பின்பற்றப்பட்ட டோக்கன் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் முறையினை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
ரேஷன் கடைகள்:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பலரும் வேலையிழந்து வருமானம் இன்றி தவித்தனர். எனவே ரேஷன் கடைகள் மூலமாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிவாரண நிதி மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இது வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த மக்களுக்கு பேருதவியாக இருந்தது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதியம் – முக்கிய கோரிக்கை!
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டோக்கன் வழங்கப்பட்டு அதில் குறிப்பிட்டு உள்ள நாளில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் தேவையற்ற கூட்டம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் 1000 கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளில் மீண்டும் டோக்கன் சிஸ்டத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 1,593 நியாய விலைக் கடைகள் உள்ளன. இதில் 437 பகுதிநேர கடைகளும் அடக்கம். தற்போது கொரோனா 3வது அலை அச்சம் நிலவுகிறது. மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் உள்ளது.
சென்னையில் சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – காவல்துறை ஆணையர்!
எனவே ஆயிரம் கார்டுகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளில் டோக்கன் முறையை பின்பற்ற அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு நேரடியாக சென்று உரிய பாதுகாப்புடன் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.