ஆகஸ்ட் 7 இனி ‘தேசிய ஈட்டி எறிதல்’ தினம் – நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நாள்!
டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்ற வரலாற்றில் முக்கியமான நாளான ஆகஸ்ட் 7 ஆம் தேதியை இந்திய தடகள சம்மேளனம் ‘தேசிய ஈட்டி எறிதல்’ தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளது.
தேசிய ஈட்டி எறிதல்:
கடந்த 2020ம் ஆண்டு 32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகமாக இருந்த காரணத்தால் கடந்த ஆண்டு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டது. 2021ம் ஆண்டு கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையில் பார்வையாளர்களை தவிர்த்து போட்டிகள் கடந்த ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை 16 நாட்கள் நடத்தப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பல விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
IPL ஆட்டம் இனி வேற மாறி! வீரர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – BCCI வெளியீடு!
ஆகஸ்ட் 7ம் தேதி அன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டு, தங்க பதக்கம் வென்றார். 23 வயதான சோப்ரா 87.58 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதல் இடத்தை வென்றுள்ளார். இதனால் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில், இந்திய தடகள சம்மேளனம் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஆகஸ்ட் 7ம் தேதியை ‘தேசிய ஈட்டி எறிதல்’ தினமாக கொண்டாட முடிவு செய்திருக்கிறது என்று AFI இன் திட்டக்குழு தலைவர் லலித் பானோட் விளையாட்டு வீரர்களின் பாராட்டு விழாவில் கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதன்பிறகு, ஆண்டுதோறும் அந்த நாளில் மாவட்டங்களுக்கு இடையேயான ஈட்டி எறிதல் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது குறித்து நீரஜ் சோப்ரா கூறுகையில், “எனது சாதனையை இந்திய தடகள சம்மேளனம் சிறப்பாக்குவதை நான் நன்றாக உணர்கிறேன். எனது சாதனை இந்த நாட்டின் இளைஞர்களை தடகள போட்டியில் கலந்து கொள்வதற்கு ஊக்குவிப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் குழந்தைகள் எதிர்காலத்தில் பதக்கம் வென்று பட்டியலில் இடம் பெற வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.