தமிழகத்தில் இன்று 1,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 22 புதிய பலி – தமிழக அரசின் அறிக்கை!
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள், குணமடைந்தவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விவரம் போன்றவற்றை தமிழக அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அரசின் அறிக்கை:
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த மாதம் முதல் மெல்ல குறையத் தொடங்கி இருக்கிறது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இருப்பினும், செப்டம்பர் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. பண்டிகை நாட்கள் வர உள்ளதால் அரசு இது தொடர்பான வழிகாட்டுதல்களை முன்னதாகவே வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
காபூலை விட்டு வெளியேறும் முன் அமெரிக்க படையினர் செய்த சாமர்த்திய செயல் – அதிர்ச்சியில் தாலிபான்கள்!
அதன்படி, தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 1,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட சற்று குறைந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 26,14,872 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இன்று மட்டும் தொற்று பாதிப்பினால் 22 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34,921 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,725 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ம் 25,63,101 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 16,850 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,51,012 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை 4,23,17,923 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 189 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,44,153 ஆக அதிகரித்துள்ளது.