தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று 1,585 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் கடந்த நாட்களை விட கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, இன்று மட்டும் 1585 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலையை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு பல தீவிர முயற்சிகளையும் செய்து வருகிறது. இதன் விளைவால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. தொடர்ந்து சில நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரபல ஜோடி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அதன்படி, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதிதாக 1,585 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 913 பேர் ஆண்கள், 672 பேர் பெண்கள் ஆவர். இதனால் தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,04,074 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 27 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 7 பேர் தனியார் மருத்துவமனையிலும், 20 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதுவரை தமிழகம் முழுவதும் தொற்றினால் 34,761 பேர் பலியாகியுள்ளனர். தற்போது வரை தமிழகத்தில் 18,603 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 1,842 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 50 ஆயிரத்து 710 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தனது அறிக்கையில் தெரிவித்து வருகிறது.