Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரபல ஜோடி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவியின் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து ரசிகர்களின் விருப்பமான பிரபல ஜோடி ஒன்று வெளியேறி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜோடி விலகல்:
விஜய் டிவி என்றவுடன் நமது நினைவுக்கு வருவது ரியாலிட்டி ஷோக்கள் தான். சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களின் ராஜாவாக இருக்கிறது விஜய் டிவி. இதனை பின்பற்றி மற்ற சேனல்களிலும் ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்பட்டாலும் விஜய் டிவி அளவுக்கு மக்களிடையே புகழ் இருக்காது. அந்த வகையில் தொடர்ந்து 3 சீசன்களாக ஒளிபரப்பாகி வருவது Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியாகும்.
தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – ஆட்சியர் அறிவிப்பு!
சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரையை சேர்ந்த நட்சத்திரங்கள் தம்பதிகளாக கலந்து கொன்கின்றனர். பல்வேறு போட்டிகளின் இறுதியில் சிறந்த தம்பதியை Mr. And Mrs சின்னத்திரை என்ற பட்டத்துடன் பெருமை படுகின்றனர். 12 ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்களில் 3 ஜோடிகள் தற்போது வரை எலிமினேஷனலில் சென்றுள்ளனர். இந்த 12 ஜோடிகளில் ஒரு ஜோடியாக கலந்துகொண்டவர்கள் தான், மணி மற்றும் சோபியா.
TN Job “FB Group” Join Now
இவர்கள் இருவரும் திரையுலகில் பிரபலமானவர்கள். இந்த ஜோடிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர்கள் சில வாரங்களாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ரசிகர்கள் இது குறித்து கேள்விகளை எழுப்ப தொடங்கினர். இந்நிலையில், சோபியா உடல்நல குறைவு காரணமாக தான், இருவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொள்ளவில்லை என்று சோபியா கூறியுள்ளார். Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்தும் வெளியேறி இருக்கிறோம். விரைவில் வைல்ட் கார்ட் எபிசோடில் ரீ என்ட்ரி கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.