தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,851 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை பற்றிய அறிக்கையை தமிழக சுகாதாரத்துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,851 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் அரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக பல தீவிர கட்டுப்பாடுகளையும் கடைபிடித்து வந்தது. தீவிர கட்டுப்பாடுகளின் விளைவால் நோய் தொற்று படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இதனால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளித்துள்ளது. இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு குறித்து அரசின் சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி குறைப்பு?- மத்திய நிதி அமைச்சர் விளக்கம்!
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில், 1851 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தமிழகத்தில் தொற்றின் மொத்த பாதிப்பு 25,90,632 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 28 பேர் தமிழகத்தில் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 34,547 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து நேற்று மேலும் 1,911 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 25,35,715 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 1,54,631 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் இதுவரை 3,99,58,164 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 20,370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை நேற்று மட்டும் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 541402 பேர் ஆக உள்ளது.