ஆகஸ்ட் 14 ஆம் தேதி ‘பிரிவினை அதிர்ச்சி நினைவு’ தினம் அனுசரிப்பு – பிரதமர் மோடி!
இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடிய மக்களது தியாகங்களையும், இன்னல்களையும் நினைவு கூறும் விதத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி, பிரிவினை அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நினைவு தினம்
சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தில் இருந்து இந்தியா சுதந்திரமடைந்தது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பொதுவாக இந்தியாவின் சுதந்திரத்தை குறித்து பள்ளி பாடப்புத்தகங்களில் மட்டுமே படித்திருக்கும் நமக்கு, அதற்காக சிந்தப்பட்ட ரத்தம், போராட்டம், உயிர் தியாகம் குறித்து அவ்வளவாக அறிந்ததில்லை. இதற்கிடையில் இந்தியா சுதந்திரமடைந்த தினமான ஆகஸ்ட் 15 ஆம் நாளை ஒவ்வொரு ஆண்டும் நாம் கொண்டாடி வருகிறோம்.
SBI YONO வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரக்ஷா பந்தன் சிறப்பு தள்ளுபடி!
இந்நிலையில் சுதந்திரத்திற்கான மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களை நினைவு கூறும் விதமாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி அன்று பிரிவினை அதிர்ச்சி நினைவு தினமாக கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், ‘இந்திய சுதந்திரத்திற்காக நடத்தப்பட்ட வெறுப்பு மற்றும் வன்முறையால் லட்சக்கணக்கான நமது சகோதர, சகோதரிகள் இடம் பெயர்ந்தும், உயிரிழந்தும் பல இக்கட்டுகளை சந்தித்தனர்.
TN Job “FB Group” Join Now
இந்த மக்களின் போராட்டங்களையும், தியாகங்களையும் நினைவு கூறுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிரிவினை அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக கடைபிடிக்கப்படும். இந்த சிறப்பு தினம் சமூகப் பிளவுகள், ஒற்றுமையின்மை என்ற விஷத்தை மக்களிடம் இருந்து அகற்றி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் மனித உணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டட்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.