‘இல்லம் தேடி கல்வி’ திட்ட தன்னார்வலர்கள் கவனத்திற்கு – ஊக்கத்தொகை விவரங்கள் அறிவிப்பு!
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இணைந்துள்ள தன்னார்வலர்களுக்கு பல மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படாமலே இருந்தது. இந்நிலையில், பலவித கோரிக்கைகளுக்கு பிறகு தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இல்லம் தேடி கல்வி:
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுமே கொரோனா பரவலின் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகத் தான் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இதனால் மாணவர்களின் கல்வித்திறன் மிகவும் பாதிப்படைந்தது. மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த கடந்த அக்டோபர் 2021 ஆம் ஆண்டு முதல் இல்லம் தேடி கல்வி என்கிற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். அதாவது, இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அவரவர் வீட்டிற்கு சென்றே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு மாணவர்களின் தரப்பில் இருந்தும், ஆசிரியர்களின் தரப்பில் இருந்தும் நல்ல ஆதரவு கிடைத்தது. ஆரம்பத்தில் சிறிய திட்டமாக உருவாக்கப்பட்ட இல்லம் தேடி கல்வி என்கிற திட்டம் தற்போது பல மாநிலங்களிலும் துவங்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள இல்லம் தேடி கல்வி திட்டத்தில் கிட்டத்தட்ட 11,000 தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், இந்த தன்னார்வலர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வரைக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறையின் புதிய நடவடிக்கை!
மேலும், இந்த தன்னார்வலர்களுக்கு சில மாதங்களுக்கு மட்டும் ஊக்கத்தொகை வழங்கிவிட்டு பல மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அரசு இந்த விவகாரத்தில் கலந்துகொண்டு தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. பல கோரிக்கைகளுக்கு பிறகு இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இணைந்துள்ள தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.