அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
எங்கள் Examsdaily வலைதளமானது அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது அனைத்து போட்டித்தேர்விற்கும் உதவும் வகையில் நடப்பு நிகழ்வுகளுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு அரசு போட்டித்தேர்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது TNPSCயின் குரூப் 1 தேர்வு வருகிற அக்டோபர் 30ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதே போல் ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாள் வருகிற செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. அத்துடன் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது அரசு போட்டித்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். இந்த தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது அனைத்து போட்டித்தேர்வுக்கும் உதவும் வகையில் நடப்பு நிகழ்வுக்கான (Weekly Current Affairs) மாதிரி தேர்வு நாளை (ஆகஸ்ட் 14) நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைத்தளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
Weekly Current Affairs MT 33
Mock Test “WhatsApp Group” Join Now