தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஆரம்பிக்க பட உள்ள நிலையில் தற்போது அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்ய இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தையும் கீழே பார்ப்போம்.

10 ஆம் வகுப்பு பொது தேர்வு:

தமிழ் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பல சிக்கல்களை சந்தித்து தவித்து வந்தது. மேலும் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி போன்ற துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக மாணவர்களின் கல்வி சீரழிந்து விட்டது என்றே கூறலாம். மேலும் இந்த கொரோனாவின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் இருந்த போது பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. இந்த வகையில் மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக இருந்து வந்தது. இதனை இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இழந்து வந்தனர். இந்நிலையில் சென்ற இறுதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10,11, 12 வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்தாக வரவுள்ள பொது தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் மே மாதம் முதல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மே 6 முதல் 30 ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகள் நடைபெற உள்ளன. செய்முறைத் தோ்வுகள் இந்த வாரம் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 304 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 10,954 மாணவா்கள், 9,708 மாணவிகள் என மொத்தம் 20,662 போ் 89 மையங்களில் தோ்வு எழுத உள்ளனா். இதில் 2 மையங்கள் தனித்தோ்வா்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

Federal வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாதம் ரூ.10,875 ஊதியம்..!

இந்த நிலையில் முன்னரே கட்டுக்காப்பாளா்கள், வழித்தட அலுவலர்கள், முதன்மைக் கண்காணிப்பாளா்கள், பறக்கும் படை அலுவலர்கள் ஆகிய பணியிடங்கள் 290 என்று நிரப்ப பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது நாமக்கல் கல்வி மாவட்டத்திற்கு உள்பட்ட 43 மையங்களுக்கு 720 அறைக் கண்காணிப்பாளா்கள் அந்தந்த மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நிலையிலான தலைமை ஆசிரியா்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டனா். இதேபோல், திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 46 மையங்களுக்கு சுமாா் 900 அறைக் கண்காணிப்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!