Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு!
இந்திய அஞ்சல் துறை மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் ஏராளமானோர் சேர்ந்தும் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அஞ்சல் துறை தமது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
சேமிப்பு திட்டங்கள்:
இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக அஞ்சல் நிலையங்களும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டங்கள் சாமானிய மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் சேர்ந்து பயன் பெறும் வகையில் உள்ளதால் சேமிப்பு திட்டங்களில் சேர மக்கள் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். அஞ்சலகத்தில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கு மட்டுமில்லாது பெரியவர்களுக்கான வருங்கால வைப்பு நிதி, மாதாந்திர வருமான திட்டம், மூத்த குடிமகன் திட்டம் போன்றவைகள் நல்ல பணப்பலன்களை அளிக்கிறது.
Exams Daily Mobile App Download
மேலும் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் சிறந்த வட்டியும், வரி சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது. வட்டியானது ஒவ்வொரு திட்டங்களை பொறுத்து மாறுபடும். இந்த நிலையில் ஆன்லைன் பண மோசடிகள் அதிகமாக நடந்து வருகிறது. இது குறித்து அஞ்சல் துறை தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ஏனெனில் இந்திய அஞ்சல் துறை சில திட்டங்கள் குறித்து கணக்கெடுத்து வருவதாகவும், வினாடி வினா போட்டிகளை நடத்தி வருவதாகவும் இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மானியத்தொகை வழங்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதனை வாடிக்கையாளர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. இது போன்ற பரிசுகள், மானியத்தொகை போன்றவற்றை அஞ்சல் துறை வழங்குவதில்லை. மேலும் தெரியாத நபர்களிடம் பிறந்த தேதி, அக்கவுண்ட் நம்பர், பாஸ்வேர்ட், ஓடிபி, மொபைல் எண் உள்ளிட்ட தனிநபர்கள் விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.