ட்விட்டர் பயனர்கள் கவனத்திற்கு – எலான் மஸ்க் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
ட்விட்டர் நிறுவனம் தற்போது அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதாவது நிர்வாக முறையிலும் செயலியிலும் புதிய மாற்றங்களை எலான் மஸ்க் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது வந்துள்ள முக்கிய தகவல்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
ட்விட்டர்:
உலகின் பிரபல நிறுவனமான ட்விட்டரை மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இவர் ட்விட்டர் நிறுவனத்திற்கு பொறுப்பேற்ற பிறகு நிறுவன வளர்ச்சியை அதிகப்படுத்தும் வகையிலும் ட்விட்டர் பயனர்களை கவரும் வகையிலும் புதிய மாற்றங்களை செய்து வருகிறார். இவர் முதல் கட்டமாக நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் இருந்து அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார்.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து ட்விட்டர் செயலில் அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார். கடந்த மாதம் ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை அறிவித்தார். இந்த அறிவிப்பு பயனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் ட்விட்டர் நிறுவனத்தில் லாபம் கிடைக்க கூடிய வகையில் ஊழியர்கள் செயல்பட வேண்டும் அதற்கு முதலில் உழைக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
தமிழகத்தில் சரிவை கண்ட தங்கம் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் – இன்றைய நிலவரம்!
Exams Daily Mobile App Download
இதனால் சிலர் ட்விட்டரை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த ப்ளூ டிக் கட்டணம் செலுத்துபவர்களுக்கு ட்டுவிட்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து தற்போது புது அப்டேட்டாக ட்விட்டரில் வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் எதிர்மறையான ட்வீட்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான புதிய கொள்கையை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். அதாவது எதிர்மறையான ட்வீட்கள் அதிகபட்சமாக நீக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.