அனைத்து ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – 30ம் தேதிக்குள் இதை செய்யாவிட்டால் ஓய்வூதியம் கிடைக்காது!

0
அனைத்து ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - 30ம் தேதிக்குள் இதை செய்யாவிட்டால் ஓய்வூதியம் கிடைக்காது!
அனைத்து ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - 30ம் தேதிக்குள் இதை செய்யாவிட்டால் ஓய்வூதியம் கிடைக்காது!
அனைத்து ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – 30ம் தேதிக்குள் இதை செய்யாவிட்டால் ஓய்வூதியம் கிடைக்காது!

தமிழ்நாடு அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பது கடந்த ஜூலை முதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் இருக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு மாவட்ட கருவூலக அலுவலர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாழ்நாள் சான்றிதழ்

தமிழகத்தில் அரசு பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஓய்வூதியத்தை தகுதியற்ற நபர்கள் பெறுவதாகவும் பல்வேறு முறைகேடுகள் ஏற்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டது. அதனால் முறைகேடுகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அதன்படி தற்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அனைத்து ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்கள் வாழ்நாள் சான்றிதழை ஜீவன் பிரமாண இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

FD திட்டத்தில் அதிக வட்டியில் பலன் பெற சூப்பர் வாய்ப்பு – முக்கிய விவரங்கள்!

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் நேரடியாக சமர்ப்பிக்க முடியாதவர்கள் தபால் மூலமாகவோ அல்லது மின்னணு விரல்ரேகை சாதனத்தை பயன்படுத்தி ஜீவன் பிரமான் இணையம் மூலமாக வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். அதன்படி கோவை மாவட்டத்தில் 35,199 ஓய்வூதியர்கள் பயன் பெற்று வருகின்றனர். இதில் 29,989 ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து நேர்காணல் செய்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

இதில் மீதமிருக்கும் 5,210 ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கவும் இல்லை, நேர்காணலிலும் பங்ககேற்கவில்லை என மாவட்ட கருவூலக அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இவர் கூறியதாவது, ஓய்வூதியம் பெறுபவர்கள் இதுவரை தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமரிப்பிக்கவில்லையெனில் வருகிற 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இல்லையெனில் ஓய்வூதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படக்கூடும். இச்சான்றிதழை சமரிப்பிக்க இயலாதவர்கள் 0422 – 2303022 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்வதன் மூலமாக கருவூலக பணியாளர்கள் ஓய்வூதியதார்களின் வீட்டிற்கே வந்து நேர்காணல் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!