FD திட்டத்தில் அதிக வட்டியில் பலன் பெற சூப்பர் வாய்ப்பு – முக்கிய விவரங்கள்!
அஞ்சல் அலுவலகம் மூலம் பல அதிக பலனுள்ள சேமிப்பு திட்டங்கள் மற்றும் வைப்பு நிதி திட்டங்கள் உள்ளன. மேலும், இங்கு பணத்தை சேமிப்பது மிகவும் பாதுகாப்பான வழிமுறையாகவும் உள்ளது.
FD திட்டம்:
அஞ்சல் அலுவலகத் திட்டங்கள் மூலம் மக்கள் தங்கள் முதலீடுகளை பாதுகாப்பாக சேமிக்க முடியும். முதலீட்டில் சிறந்த லாபம் பெற விரும்பினால் தபால் அலுவலகம் வழங்கும் நிலையான வைப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். அஞ்சல் அலுவலக நிலையான வைப்புத் திட்டம் அதிக வட்டி விகிதங்கள், அரசு உத்தரவாதம், காலாண்டு வட்டி வசதி உட்பட பல நன்மைகளை வழங்குகிறது.
தமிழகத்தில் நாளை (செப். 23) இந்த பகுதியில் பவர் கட் – முழு விவரம் இதோ!
போஸ்ட் ஆபிசில் FD திட்டம் துவங்குவது மிகவும் எளிய முறையானது ஆகும். இந்த திட்டத்தில் பயனர்கள் தங்கள் தொகையை 1,2,3 மற்றும் 5 ஆண்டுகள் என்று தங்களுக்கு விருப்பமான காலத்தை தேர்வு செய்து கொள்ளலாம். FD திட்டத்தில் குறைந்த பட்சம் ரூ.1,000 மட்டும் செலுத்தி சேர்ந்து கொள்ள முடியும். அதே சமயத்தில் அதிக பட்ச தொகைக்கான வரம்புகள் ஏதும் இல்லை. குறிப்பாக, இதன் மூலம் பெரும் வருவாய்க்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
ஒரு கிளையில் இருந்து உங்கள் திட்டத்தை வேறு கிளைக்கு மாற்றவும், தனி நபர் கணக்கை கூட்டு கணக்காகவும் மாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலும், 7 நாட்கள் முதல் ஒரு வருடம் வரையிலான மற்றும் 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்பு நிதி தொகைக்கு 5.50 சதவீத வட்டியும், . 3 முதல் 5 வருட வட்டிக்கு 6.70 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்