அசாமில் 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!
அசாம் மாநிலத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த 5 மாவட்டங்களில் பக்ரீத் பண்டிகையை கடைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிங்களில் இரவுநேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் மட்டுமே இதுவரை அமலில் உள்ளது. இதனிடையே இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகையை ஒட்டி சில கட்டுபாடுகளை விதிப்பதாக அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அசாம் மாநிலத்தில் உள்ள 5 மாவட்டங்களில் மசூதிகள் மற்றும் பொது இடங்களில் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு!
இது தொடர்பாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி, இஸ்லாமிய மதத்தலைவர்கள் உட்பட ஐந்து பேர் வரை மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், கோலாகாட், ஜோர்ஹாட், லக்கிம்பூர், சோனித்பூர் மற்றும் பிஸ்வநாத் மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாடுகள் நேற்று (ஜூலை 19) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அசாமில் மீதமுள்ள 27 மாவட்டங்களில், முழு ஊரடங்கு உத்தரவானது மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக அசாம் மாநிலத்துக்கு வரும் அனைத்து பயணிகளும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என மாநில அரசு அறிவித்துள்ளது. தவிர கொரோனா பாதிப்புகள் அதிகம் பதிவு செய்யப்படும் மாவட்டங்களில் அனைத்து வணிக மற்றும் வணிக நிறுவனங்கள், மளிகை பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறி கடைகள், பால் கடைகள், விலங்கு தீவனம், உணவகங்கள், தபாக்கள் போன்றவை மூடப்பட்டிருக்கும். மேலும் குறைந்த அளவு பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வரும் பகுதிகளில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
TCS போன்ற கார்ப்பரேட் நிறுவன வேலை தான் உங்கள் கனவா? அப்போ இந்த தேர்வை எழுதுங்கள்!
அனைத்து பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள இந்த ஐந்து மாவட்டங்களிலும் பொருட்களின் இயக்கத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்திற்கு தடை தொடரும். மற்ற மாவட்டங்களில், திருமணங்கள் அல்லது இறுதி சடங்குகளில் 10 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி கொடுக்கப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரடி வகுப்புகளுக்கு இன்னும் அனுமதி கொடுக்கப்படவில்லை. இந்த வகையான கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.