ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்க ஏப்ரல் 15 வரை கால அவகாசம் – TNPSC அறிவிப்பு!!
டேராடூன் ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வுகள் வரும் ஜூன் மாதம் நடக்க உள்ள நிலையில் இக்கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமாறு அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.
டேராடூன் ராணுவ கல்லூரி:
உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள டேராடூன் ராணுவக் கல்லூரியில் 2021ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடவிபெற உள்ளது. இதற்கான நுழைவு தேர்வுகள் ஜூன் மாதம் 5ம் தேதி நடக்க உள்ளது. சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த தேர்வுகள் நடக்க உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான தேர்வுகள் இரண்டு கட்டமாக நாடாகும். முதல் கட்ட தேர்வில் எழுத்துத்தேர்வு நடைபெறும். அதில், ஆங்கிலம், கணக்கு, பொது அறிவு ஆகியதாள்கள் இடம்பெறும்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி பொது விடுமுறை – தலைமை செயலாளர் உத்தரவு!!
முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை தேர்வு செய்து நேர்முகத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். ராணுவக் கல்லூரியில் சேருவதற்கு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவராகவோ அல்லது 7-ம் வகுப்பு முடித்தவராகவோ இருக்க வேண்டும். குறைந்தபட்சம் பதினொன்றரை வயதுக்கு குறையாமலும் 13 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பம்:
கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பத்தினை இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், பூங்காநகர், சென்னை 600 003’ என்ற முகவரிக்கு ஏப்ரல் 15ம் தேதி மாலை 5:45 மணிக்குள் சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்