அரியலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!

0
அரியலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - அரசு அறிவிப்பு!
அரியலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - அரசு அறிவிப்பு!
அரியலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரியலூர் மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி வரதராஜபெருமாள் திருக்கோவிலில் தேரோட்ட திருவிழா நடைபெற இருப்பதால் அன்று ஒரு நாள் மட்டும் அந்த மாவட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம்.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் சென்ற இரு ஆண்டுகளாக நாட்டில் நிலவி வந்த கொரோனா தொற்றின் காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த பட்டு இருந்தது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் மூலமாகவே பாடங்களை நடத்தி வந்தனர். அதனால் மாணவர்களும் வேறு வழி இன்றி நேரடி வகுப்புகளுக்கு செல்லாமல் தவித்து வந்தனர். மேலும் அதனை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள எல்லா ஊர்களிலும் எந்த திருவிழாக்களும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் சற்று குறைந்த காரணத்தால் மீண்டும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – விரைவில் முடிவுக்கு வரும் வீட்டிலிருந்து வேலை!

இந்நிலையில் தற்போது அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருகிற 18 ஆம் தேதி அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை என்று கூறப்பட்டு உள்ளது. அடுத்தாக, தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை சார்பில் நடத்தும் இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு இது பொருந்தாது என்றும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த விடுமுறையை ஈடு செய்ய அடுத்த மாதம் மே 7ஆம் தேதி அன்று முழு வேலை நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டும், குறைந்த பணியாளர்களை கொண்டும் செயல்படும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!