தமிழகத்தில் ஜூலை 27ல் மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் துணை மின்நிலையத்தில் நாளை (ஜூலை 27) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. மேலும் எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் மாதந்தோறும் அனைத்து துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகின்றது. மின்சாரம் மின் பயனர்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையில் மின்கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு போன்ற காரணத்தால் விபத்துக்கள் ஏற்பட்ட கூடும். எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் மின்தடை அறிவிக்கப்பட்டு அந்த மின் கோளாறுகளை மின்வாரியம் சரி செய்கின்றனர்.
தமிழக பள்ளிகளுக்கான முக்கிய அறிவிப்பு – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!
மேலும் மின்தடை செய்யப்படும் பகுதிகள் முன்னதாகவே பொது மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் துணை மின்நிலையத்தில் நாளை (ஜூலை 27) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தேவிபட்டினம் பகுதிகளில் மின் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
தேவிபட்டினம் மின்நிலையத்தை சார்ந்த தேவிபட்டினம், சித்தார்கோட்டை, கழனிக்குடி, பெறுவயல், சிறுவயல், நரியனேந்தல் மரப்பாலம், இலந்தை கூட்டம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு அரசு மின்வாரியத்துறை மற்றும் ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் ஆர் பாலமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதனால் அந்த பகுதியினை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்தடைக்கு ஏற்றாற்போல தங்களது பணிகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.