தமிழகத்தில் ஜூன் 27ல் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஜூன் 27ம் தேதி மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
மின்தடை பகுதிகள்:
தமிழகத்தில் தடையில்லா மின் சேவையை மக்களுக்கு வழங்கும் நோக்கில் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை மின் கம்பங்கள் சரிபார்க்கப்பட்டு மின் சாதன உறுதி பாகங்கள் மாற்றப்படும். இதன் மூலம் பாதுகாப்பான தடையில்லா மின்சாரம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. தற்போது கடந்த சில தினங்களாக மின்தடை அதிகம் ஏற்பட்டு வருகிறது. முன்னறிவிப்புகள் ஏதும் இன்றி மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது என மின் நுகர்வோர் புகார் அளித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க அனுமதி – ஜூன் 28 முதல் தொடக்கம்!
இது குறித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 9 மாதங்களாக அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு மற்றும் மின் கம்பங்கள் மாற்றுதல் போன்ற பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அதனால் தற்போது மாவட்ட வாரியாக மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் குறிப்பிட்ட நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. வரும் ஜூன் 28க்குள் பணிகள் நிறைவு பெறும் என தெரிவித்துள்ளார். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை தூத்துக்குடியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
TN Job “FB Group” Join Now
அதனால் முத்தையாபுரம், தோப்பு தெரு , கிழக்கு தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு, முஸ்லீம் தெரு, திருச்செந்தூர் மெயின் ரோடு, பாஞ்சாலங்குறிச்சி, கச்சேரி தளவாய்புரம், ஓட்டப்பிடாரம், ஈசிஆர் ரோடு, பனையூர், ஆனந்தம்மடபுதுச்சேரி, மேல்மருதூர், பெரியார் நகர் , மேல அரசடி, வெள்ளாரம், ஆனந்த் நகர், சமுத்திரம் ஆகிய பகுதிகளில் உயர் அழுத்த மின் பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல் மற்றும் சாய்ந்துள்ள மின் கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகளுக்காக நாளை (27.06.2020) காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தூத்துக்குடி மின்வாரியம் அறிவித்துள்ளது.