தமிழகத்தில் நாளை (செப். 28) மின்தடை ஏற்படும் பகுதிகள் – பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் மின்சார துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நாளை (செப்.28) பராமரிப்பு பணிகள் நடைபெறும் பகுதிகள் குறித்தும், அதனால் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
மின்தடை பகுதிகள்:
தமிழக மின்சார துறை மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் பல இடங்களில் மின்சார விபத்துகள் ஏற்படுவதாகவும், அறிவிப்பு இல்லாமல் மின்தடை ஏற்படுவதாகவும் புகார் வெளியான வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் அதனை தடுக்க துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடத்தப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் படி மாதம் மாதம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அன்றைய தினம் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் குறித்த விவரங்களை முன் கூட்டியே மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நாளை ( செப். 28) காங்கயம் பெரியார் நகர், புதுப்பை பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கயம் பெரியார் நகர், புதுப்பை பகுதிகளில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரங்களும் வெளியாகி இருக்கிறது.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஓய்வு பெறும் வயது உயர்வு! சுற்றறிக்கை வெளியீடு!
பெரியார் நகர் துணை மின் நிலையம்: சிவனாதபுரம், எல்.கே.சி. நகர், அண்ணா நகர், தீத்தாம்பாளையம், லக்கமநாயக்கன்பட்டி, ஏ.பி. புதூர், சேரன் நகர், எஸ். ஆர்.ஜி, வலசு ரோடு, கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது.
Exams Daily Mobile App Download
புதுப்பை துணை மின் நிலையம்: தங்கமேடு, மொட்டக்காளிவலசு, புதுப்பை, கஸ்தூரிபாளையம், மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுத்தூர், நாயக்கன்புதூர், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு, கரைவலசு, செம்மடை, பள்ளசெல்லிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (செப். 28 ) மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்