அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஓய்வு பெறும் வயது உயர்வு! சுற்றறிக்கை வெளியீடு!

0
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஓய்வு பெறும் வயது உயர்வு! சுற்றறிக்கை வெளியீடு!
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஓய்வு பெறும் வயது உயர்வு! சுற்றறிக்கை வெளியீடு!
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஓய்வு பெறும் வயது உயர்வு! சுற்றறிக்கை வெளியீடு!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஓய்வு பெறும் வயது:

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலத்தில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகையை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டதாக அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மறுபடியும் ஓய்வு பெறும் வயதை 59-இல் இருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது.

ஏற்கனவே தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி வேலைக்காக வருடக்கணக்காக காத்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் பணியில் உள்ள அரசு ஊழியர்களின் வயது அதிகரிப்பு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணி ஓய்வு பெறும் வயது உயர்வு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதற்கு மத்தியில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 9 நாட்கள் விடுமுறை!

Exams Daily Mobile App Download

இது குறித்து ஒருங்கிணைந்த கல்வி திட்டமான சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஒருங்கிணைந்த கல்வி திட்ட தொகுப்பூதிய பணியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், கல்வி மைய பாதுகாவலர், உதவியாளர்கள் ஆகியோர்களின் ஓய்வு பெறும் வயதானது 58ல் இருந்து தற்போது மற்ற அரசு ஊழியர்களை போல 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து, அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டார வள மையங்களுக்கும் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!