ஏப்ரல் 5 மகாசக்தியை வெளிப்படுத்துவோம் – கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடியின் உரை..!
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் இன்று பிரதமர் மோடி 3வது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றும் மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் உரை:
- நாம் எடுக்கும் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன.
- ஊரடங்கு உத்தரவை மதித்து வீட்டில் இருக்கும் மக்கள் இறைவனின் வடிவத்தை போன்றவர்கள்.
- ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றி வரும் நம் நாட்டு மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
- கொரோனா உருவாக்கிய இருளில் இருந்து மக்கள் வெளியேறும் விதமாக வரும் ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள அனைத்து மின்சார விளக்குகளையும் அணைத்து விட்டு வீடு முழுவதும் அகல் விளக்கு, மொபைல் பிளாஷ் லைட் அல்லது டார்ச் லைட் பயன்படுத்தி 9 நிமிடம் ஒளிரவிடுங்கள்.
- இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனவை எதிர்த்து போரிடுவோம்.
- மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடித்து அவரவர் வீட்டில் இருந்து கூட்டம் கூடாமல் விளக்கு ஏற்ற வேண்டும்.
ஏப்ரல் 14க்கு பிறகு ரயில், விமான பயணத்திற்கான முன்பதிவு தொடக்கம்
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |