தமிழகத்திற்கு மேலும் 3,60,000 டோஸ் கோவிஷீல்டு வருகை – மத்திய அரசு ஒதுக்கீடு!

0
தமிழகத்திற்கு மேலும் 3,60,000 டோஸ் கோவிஷீல்டு வருகை - மத்திய அரசு ஒதுக்கீடு!
தமிழகத்திற்கு மேலும் 3,60,000 டோஸ் கோவிஷீல்டு வருகை - மத்திய அரசு ஒதுக்கீடு!தமிழகத்திற்கு மேலும் 3,60,000 டோஸ் கோவிஷீல்டு வருகை - மத்திய அரசு ஒதுக்கீடு!
தமிழகத்திற்கு மேலும் 3,60,000 டோஸ் கோவிஷீல்டு வருகை – மத்திய அரசு ஒதுக்கீடு!

மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்திருந்த ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் இரண்டு நாட்களுக்கு முன்னதாக தமிழகம் வந்த நிலையில், இன்று மேலும், 3,60,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி:

இந்தியாவில் மத்திய அரசின் ஒப்புதலின் படி கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த தடுப்பூசிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல், முதல் கட்டமாக கொரோனா முன்கள பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் என அனைவருக்கும் செலுத்தப்பட்டது. தவிர 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 60 வயதுக்குட்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் இரண்டாம் கட்டமாக செலுத்தப்பட்டது.

2021 நீட் தேர்வுக்கு தமிழகத்தில் 11,236 மாணவர்கள் விண்ணப்பம் – தமிழக அரசு தகவல்!

மே மாதம் 1 ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பல மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது. ஆனால் தமிழகத்தில் மக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் செலுத்திக் கொள்கின்றனர். மேலும், தமிழகம் தடுப்பூசியை முறையாக பயன்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக மத்திய அரசு தமிழகத்திற்கு 1,08,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்பியது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு மேலும், 3,60,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது. தடுப்பூசிகள் புனேவிலிருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று பகல் 12.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது. தமிழக அரசிடம் இந்த பார்சல்கள் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப பிரித்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!