TNPSC 5000+ காலிப்பணியிடங்களுக்கான குரூப் 2 & 2A தேர்வு – பிப்.18 இல் அறிவிப்பு!
தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2A தகுதி நிலைகளுக்கான TNPSC தேர்வுகள் விரைவில் நடத்தப்பட இருக்கும் நிலையில், அதற்கான அறிவிப்பு நாளை வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வு அறிவிப்பு:
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் கடந்த ஆண்டு இறுதியில் தான் அரசு பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளின் விதிமுறைகளை மாற்றி அமைத்தது. முன்னதாக தமிழக அரசின் பணிகளில் அதிக அளவில் வெளிமாநிலத்தவர் சேர்க்கப்படும் நிலை இருந்தது. இது தொடரபாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் TNPSC தேர்வுகளில் தேர்வு முறை மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, ஆங்கில மொழி தேர்வு நீக்கம் செய்யப்பட்டு, தமிழ்மொழி தேர்வு தகுதி தேர்வாக அறிவிக்கப்பட்டது.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு 2022 – மாநில அரசு அறிவிப்பு!
தேர்வர்கள் தமிழ் மொழித்தாளில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொது அறிவு பகுதி விடைத்தாள் மதிப்பிடப்படும். இதனால் தமிழ் மொழியை அறிந்தவர்களும், சொந்த மாநிலத்தவர்களும் மட்டுமே அரசு பணிகளில் சேரும் வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டில் TNPSC 32 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்க்கான அதிகாரபூர்வ தகவல் முன்னதாக வெளியிடப்பட்டது. அறிவிப்பு வெளியான 75 நாள்களில் தேர்வுகள் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கிக்கு ஏற்பட்ட மன வருத்தம் – அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!
5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு மார்ச் மாதமும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு ஏப்ரல் மாதமும் நடக்க உள்ளது. இந்நிலையில், நாளை சென்னை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிற்பகல் 12.30 மணிக்கு டிஎன்பிஎஸ் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார். இதறகான அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.