12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு 2022 – மாநில அரசு அறிவிப்பு!

0
12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு 2022 - மாநில அரசு அறிவிப்பு!
12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு 2022 - மாநில அரசு அறிவிப்பு!12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு 2022 - மாநில அரசு அறிவிப்பு!
12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு 2022 – மாநில அரசு அறிவிப்பு!

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தாக்கம் சற்று ஓய்ந்து வருவதால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகள் கடைபிடிப்பதன் அடிப்படையில் இந்த பொதுதேர்வு நடைபெறும் என்று கல்வி வாரியத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி முகேஷ் மால்வியா தெரிவித்தார்

இன்று முதல் பொதுத்தேர்வு:

கொரோனா பெருந்தொற்று நாடு முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொற்றின் எதிரொலியாக பள்ளிகள், கல்லூரிகள் ஒன்றரை வருடங்களாக மூடப்பட்டு ஆன்லைன் முறையில்வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கிக்கு ஏற்பட்ட மன வருத்தம் – அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!

இதனை தொடர்ந்து கடந்த கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடக்கவில்லை முந்தைய முடிவுகள் மற்றும் உள் தேர்வுகளின் மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று முதல் மாநிலம் முழுவதும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. மேலும் மார்ச் 12-ம் தேதியோடு பொதுத்தேர்வு நிறைவடைகின்றது. மொத்தம் 3,586 மையங்களில் இந்த பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

இந்தியாவில் ஜூன் 30க்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சுமார் 7 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வில் கலந்து கொள்கின்றன என்று கல்வி வாரியத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி முகேஷ் மால்வியா தெரிவித்தார். மேலும் தேர்வு எழுதும்மாணவர்களும், பள்ளி ஊழியர்களும் கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் தனி அறையில் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!