கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் வெளியே செல்ல தடை, கட்டாய சட்டம் அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!
உலகளவில் உருமாறிய கொரோனா வைரஸான ஓமிக்ரான் பரவி வருகிறது. இந்நிலையில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மட்டுமே வெளியே நடமாட தடை விதித்துள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்:
புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பல தளர்வுகள் வழங்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. இந்நிலையில் உலக நாடுகளில் கொரோனா உருமாறிய வைரஸான ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தான் பரவாத வண்ணம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3 பேருக்கு இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
ஹேமாவை தேடி செல்லும் பாரதி, லக்ஷ்மியை தேடும் கண்ணம்மா – பாச போராட்டத்துடன் வெளியான ப்ரோமோ!
அந்த வகையில் புதுச்சேரியில் நோய் தொற்றை தடுக்கவும், 100 சதவித தடுப்பூசி போட்ட யூனியன் பிரதேசமாக மாற்ற அரசு பல்வேறு முகாம்களை நடத்தி வருகிறது. அதன் காரணமாக இதுவரை 7,70,000 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 4,48,000 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை புதுச்சேரி முழுவதும் 77 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்? வணிகர் சங்க தலைவர் அச்சம்!
தற்போது கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக புதிய அறிவிப்பு ஒன்று புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது. அதில், புதுச்சேரி பொது சுகாதார சட்டம் 1973ன் பிரிவு 54(1)விதியின் கீழ் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மீறி வெளியே நடமாடினால் தண்டிக்கப்படுவார்கள் என கொரோனா தடுப்பூசி சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனாவை தடுக்க புதுச்சேரியில் கட்டாய தடுப்பூசி சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் இதை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.