ஹேமாவை தேடி செல்லும் பாரதி, லக்ஷ்மியை தேடும் கண்ணம்மா – பாச போராட்டத்துடன் வெளியான ப்ரோமோ!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பல திருப்பங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாளைய எபிசோட் குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியும், கண்ணம்மாவும் சேர்ந்து வாழ தொடங்கி இருக்கின்றனர். இருவரையும் அடிக்கடி சேர்த்து வைக்க சௌந்தர்யா குமார் மூலமாக திட்டங்களை செய்கிறார். மேலும் குழந்தைகளை இருவரும் சேர்ந்து சென்று பார்த்து சந்தோசமாக இருக்கின்றனர். அப்போது லட்சுமி அப்பாவை காட்டுவதாக என்னிடம் சொல்லிருக்க என கேட்க, கண்டிப்பாக உன் அப்பாவை காட்டுவேன் என கண்ணம்மா சொல்கிறார். மேலும் வெண்பா ஜெயிலில் இருப்பதால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – அகில் வெளியிட்ட புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!
சாந்தி பாரதியிடம் வெண்பாவை வெளியே எடுக்குமாறு கேட்க, அஞ்சலிக்கு தவறான மருந்துகளை எழுதி கொடுத்ததால் பாரதி கோவமாக இருக்கிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பாரதி தூங்கி கொண்டிருக்க, ஹேமா அழுவது போல கனவு வருகிறது. அதனால் பதறி எழுந்த பாரதி ஹேமா ஏன் அழுகிறாள் என்ன நடந்திருக்கும் என தெரியாமல் போய் பார்த்துருவோம் என கிளம்புகிறார்.
விஜய் டிவியில் விரைவில் “ஈரமான ரோஜாவே” சீசன் 2 – கதாநாயகியாக பிக்பாஸ் பிரபலம்!
அவர் கிளம்பியதும் கண்ணம்மாவிற்கு லட்சுமி அழுவது போல கனவு வருகிறது. அவரும் லக்ஷ்மியை பார்க்க செல்கிறார். பின் லட்சுமி ஹேமா தூங்கி கொண்டிருக்க பாரதி சென்று ஹேமாவை பார்த்து தலையை கோதி விடுகிறார். அப்போது கண்ணம்மா அங்கே வர பாரதி அவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். நீ எதற்கு இங்கே வந்தாய் என கேட்க, நீங்க எதற்கு வந்தீங்களோ அதற்கு தான் என கண்ணம்மா சொல்கிறார். பின் அவர் லக்ஷ்மியை பார்க்க செல்ல, பதறி போய் வந்த சௌந்தர்யா பாரதி கண்ணம்மா குழந்தைகளுடன் இருப்பதை பார்த்து சந்தோசப்படுகிறார்.