தமிழகத்தில் மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்? வணிகர் சங்க தலைவர் அச்சம்!

0
தமிழகத்தில் மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்? வணிகர் சங்க தலைவர் அச்சம்!   
தமிழகத்தில் மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்? வணிகர் சங்க தலைவர் அச்சம்!   
தமிழகத்தில் மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்? வணிகர் சங்க தலைவர் அச்சம்!   

தமிழகத்தில் கொரோனா தொற்றின் மாறுபாடு அடைந்த வைரஸ் காரணமாக மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வந்தால் வணிகர்கள் நிலை மேலும் மோசமடைந்து விடும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.

மீண்டும் ஊரடங்கு:

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல மாதங்கள் தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதனால் அனைத்து பொது நடவடிக்கைகளும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அனைத்து தொழில்களும் நிறுத்தப்பட்டது. மக்களின் அத்தியாவசிய தேவைக்குரிய பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் வணிகர்கள் மிகவும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர். அனைத்து தொழில்களும் முடங்கியதால் நாட்டில் பொருளாதாரமும் சரிவடைந்து காணப்பட்டது. இந்நிலையில், தற்போது புதிதாக கொரோனா தொற்றின் மாறுபாடு அடைந்த ஓமைக்ரான் தோற்று பரவி வருகிறது.

ஹேமாவை தேடி செல்லும் பாரதி, லக்ஷ்மியை தேடும் கண்ணம்மா – பாச போராட்டத்துடன் வெளியான ப்ரோமோ!

இதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலுக்குவரும் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் ‘சிசிடிவி’ கேமரா செயல்பாடு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் கலெக்டர் பிரபு சங்கர், எஸ்.பி., சுந்தர வடிவேல் ஆகியோர் இருந்தனர். அப்போது, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அவர்கள் கொரோனா கால ஊரடங்கு அச்சம் குறித்து பேசினார். மற்றும் பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தார். அதில், வணிகர் நல வாரியத்தில், கட்டணம் இல்லாமல் உறுப்பினராக சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக அரசு சுகாதார மையத்தில் தேர்வில்லாத வேலை – இறுதி வாய்ப்பு..!

எங்களின் கோரிக்கையை தமிழக முதல்வர் அமல்படுத்தினார். ஆனால் பல வணிகர்கள் உறுப்பினராக சேர்ந்தால் வரி கட்ட வேண்டும் என்ற அச்சத்தில் அதில் சேராமல் இருந்து வருகின்றனர். இதற்கான அவகாசம் மீண்டும் தமிழக அரசிடம் வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள கடைகளின் வாடகையை அரசுமுறைப்படுத்த வேண்டும். அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.மீண்டும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்தால் அதன் 70 சதவீத வியாபாரிகள் மீண்டும் மிக மோசமானநிலைக்குச்சென்று விடுவார்கள். கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த வணிகர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அரசு வழங்க வேண்டும். அனைத்து கடைகளின் முன்பும் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை அவர் வைத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!