தமிழகத்தில் ஆகஸ்ட் 26ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 26ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தற்போது வேலைவாய்ப்பை தேடுவோர் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெற அறிவுறுத்தி உள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இந்த நேரத்தில் ஊரடங்கால் வேலையிழந்தோர் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேட ஆரம்பித்தனர். இவர்களுக்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டில் கொரோனா பரவலுக்கு முன்பு மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தனியார்துறை வேலைவாய்ப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இடையில் பரவிய கொரோனா தாக்கத்தால் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிறகு பதிப்புகள் சற்று குறைந்து வந்ததை அடுத்து வேலைவாய்ப்பு முகாம்களை மீண்டும் நடத்த தொடங்கியது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அம்மாவட்டத்தில் 2ம் மற்றும் 4ம் வெள்ளி கிழமைகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவது வழக்கம்.
இந்தியாவில் பத்ம விருதுகளுக்கான பரிந்துரை – செப்.15 கடைசி நாள்!
அந்த வகையில் ஆகஸ்ட் 26ம் தேதி ( வெள்ளிக்கிழமை) விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டப் படிப்பு, டிப்ளமோ கல்வி தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்