தினசரி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல் – முதல்வர் அறிவிப்பு!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை பரவல் இன்னும் உறுதி செய்யப்படாத போதிலும், நாடு முழுவதும் ஓமைக்ரான் அதிகம் பரவி வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இரவு ஊரடங்கு:
நாடு முழுவதும் ஓமைக்ரான் அதிகம் பரவி வரும் நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவருக்கு கூட ஓமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஆனால் நாட்டின் 16 மாநிலங்களில் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, மாநிலத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்த அறிக்கையினை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஓமைக்ரான் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்? முதல்வர் ஆலோசனை!
அந்த அறிக்கையில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லியில் அதிக அளவில் தொற்று பரவி வருகிறது. மத்திய பிரதேசத்திலும், 24 மணி நேரத்தில் 30 பேருக்கு கொரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக பாதிப்பு உள்ள மாநிலங்களிலிருந்து மக்கள் தொடர்ந்து வருகிறார்கள். அதனால் ஓமைக்ரான் மாறுபாடு வைரஸ் மத்தியப் பிரதேசத்தில் வருவதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது. மாநிலம் முழுவதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் கோவிட் 3வது அலை பரவலை தடுக்க வேண்டும். தொற்று வேகமாக பரவாமல் இருக்க முகக்கவசம் அணிதல், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது, தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் டிச.25 முதல் ஜன.2 வரை அரையாண்டு விடுமுறைகள் ரத்து? தனியார் பள்ளிகள் கோரிக்கை!
மேலும், மாநிலத்தில் தேவைப்பட்டால் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒருவருக்கு அவரது வீட்டில் தொற்று ஏற்பட்டு, தனிமைப்படுத்த இடமில்லை என்றால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். குழந்தைகள் 50% வருகையுடன் பள்ளிக்குச் செல்வார்கள். இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டங்கள், ஜிம்கள், சினிமா அரங்குகள் போன்ற இடங்களுக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும் அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்