TN TRB தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு – பணி வரன்முறை!
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 09.12.2012, 10.12.2012 மற்றும் 11.12.2012 ஆகிய தேதிகளில் பணி நியமன ஆணை பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை வெளியீடு:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் போட்டித் தேர்வுகள் மூலமாக ஆசிரியர்கள் பணியமர்த்தபடுகின்றனர். தமிழ்நாடு ஆசிரியர் தகுதிதேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பேரிடர் காரணமாக 2 வருடங்களாக பள்ளிகள்மூடப்பட்டிருந்ததால் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்படவில்லை அதனால் ஆசிரியர் தகுதித்தேர்வும் (டெட்) நடைபெறவில்லை. தற்போது கொரோனா மூன்றாம் அலை தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது.
IPL 2022: இந்திய மண்ணில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் – சவுரவ் கங்குலி அறிவிப்பு!
அதனால் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது. நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்துள்ளதால் ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளதால் பள்ளிகளில் கற்பித்தலில் தொய்வு ஏற்படுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதனை அடுத்து அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் டெட் முதல் தால் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதனால் விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 09.12.2012, 10.12.2012 மற்றும் 11.12.2012 ஆகிய தேதிகளில் பணி நியமன ஆணைகளை பெற்ற தமிழ் மொழிப் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.