IPL 2022: இந்திய மண்ணில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் – சவுரவ் கங்குலி அறிவிப்பு!

0
IPL 2022: இந்திய மண்ணில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் - சவுரவ் கங்குலி அறிவிப்பு!
IPL 2022: இந்திய மண்ணில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் - சவுரவ் கங்குலி அறிவிப்பு!
IPL 2022: இந்திய மண்ணில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் – சவுரவ் கங்குலி அறிவிப்பு!

கொரோனா தொற்று பரவல் காரணமாய் 2021 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் துபாயில் நடைபெற்றது. இந்த ஆண்டு மீண்டும் கொரோனா 3 ஆம் அலை பரவி வருவதால் 2022 IPL தொடர் இந்தியாவில் நடைபெறுமா என்று கேள்வி எழுந்த நிலையில் தற்போது இது குறித்து முக்கிய அறிவிப்பை BCCI தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ளார்.

சவுரவ் கங்குலி அறிவிப்பு:

கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு IPL போட்டிகள் துபாயில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான IPL அணிகளின் ஏலமும் துபையில் நடந்தது. தற்போது துபாயில் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 2022 ஆம் ஆண்டுக்கான IPL தொடரை துபாயில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் தென்னாப்பிரிக்காவில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த பிசிசிஐ ஆலோசனை நடத்திய நிலையில் இந்த ஆண்டு IPL தொடர் இந்தியாவிலையே நடத்த இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை BCCI தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ளார்.

TCS நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு – விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!

மும்பையின் மூன்று மைதானங்கள்- வான்கடே, பிரபோர்ன் மற்றும் மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியம் ஆகிய மூன்று மைதானத்திலும் மேலும் புனேவில் உள்ள 3 மைதானத்திலும் இந்த ஆண்டு IPL போட்டிகள் நடைபெறும் என்று BCCI கங்குலி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்று மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த 74 குரூப் ஸ்டேஜ் லீக் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்றும் குவாலிபையர் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

TNPSC 5831 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – விரைவில் வெளியாகுமா? குரூப் 2 எதிர்பார்ப்புகள்!

மும்பையில் கோவிட் நோய் பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு குவாலிபையர் போட்டிகளை பிசிசிஐ தென்னாப்பிரிக்காவில் போட்டிகளை நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக மைதானத்திற்குள் குறைந்தபட்சம் 25 சதவீத மக்கள் கூட்டத்தை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐபிஎல் 2022 இரண்டு மாதம் நடைபெறும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கி மே இறுதி வரை தொடரும் என்று கடந்த மாதம் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தினார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!