தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கை!!

0
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கை!!
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கை!!
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதந்தோறும் பொருள்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது என ரேஷன் கடை ஊழியர்களுக்கு சுற்றறிக்கை மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ரேஷன் கடைகள்:

தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலமாக பல்வேறு பொருள்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, ஆகியவை வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர் சென்று கை ரேகை வைத்து பொருள்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் ரேஷன் கடைகளுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைபிடித்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Pawan Hans Ltd நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – செப்.30 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

அது மட்டுமில்லாமல் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையானது அனுப்பப்பட்டுள்ளது. அதில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் நேரடியாக வந்து பொருட்களை வாங்க முடியாத பட்சத்தில் மாற்றாக வேறொருவர் வந்து வாங்குவதற்கு அத்தாட்சி கடிதமானது வழங்க வேண்டும்.

JEE மெயின்ஸ் 2021 விண்ணப்ப பதிவு – இன்றே கடைசி நாள்!

அந்த கடிதத்தை காண்பித்து அவர்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் ஒரு சில ரேஷன் கடைகளில் பொதுமக்களை அலைக்கழிப்பதாக புகார்கள் வந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களை அலைக்கழிக்க கூடிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு, அங்கிருக்கக்கூடிய அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை வாயிலாக கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் பொதுமக்களை அலைக்கழிப்பதாக புகார் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!