ஓய்வூதியதரார்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய தகவல் தொழில் நுட்பம் அறிமுகம்!
இந்தியாவில் ஓய்வூதியதாரர்களுக்கு புதிய சலுகையாக Face Recognition என்ற புதிய தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவர்.
பென்ஷன்:
இந்தியாவில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணி காலத்திற்கு பிறகு உதவும் வகையில் மாதந்தோறும் பென்ஷன் தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை அவர்களது வயது முதிர்ந்த காலத்தில் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது ஆண்டுதோறும் உரிய ஓய்வூதிய அலுவலகத்திற்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும். இதனால் ஓய்வூதியம் பெறும் நபர் உயிரோடு இருப்பது உறுதி செய்யப்படுகிறது. நேரில் சென்று ஓய்வூதிய சான்றிதழ் பெறுவதில் அவர்கள் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” ரோஷினிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அருண் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
மேலும் வயது முதிர்ந்தவர்கள் கொரோனா பெருந்தொற்று காலத்தில் வெளியில் செல்வது நோய் பரவும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் வகையில் அஞ்சல் துறை மூலமாக ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே சென்று டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அஞ்சல்காரரிடம் உங்கள் ஆதார் எண், மொபைல் எண், ஓய்வூதிய அடையாள அட்டை எண், வங்கி கணக்கு விவரம் போன்றவைகளை சமர்ப்பித்து கைரேகையை பதிவு செய்து டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
தமிழகத்தில் நாளை (டிச.2) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து தற்போது ஓய்வூதியதாரர்களுக்கு Face Recognition என்ற புதிய தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த தொழில்நுட்பமே ஓய்வுதாரர்கள் வாழ்ந்ததற்கான சான்றாக அமையும். இந்த தொழில்நுட்பம் மூலம் ஓய்வூதியம் பெறும் நபர்களின் முகத்தை கண்டறிய முடியும். மேலும், இதன் மூலமாக மத்திய மற்றும் மாநில துறைகளை சார்ந்த 60 லட்சம் பேர் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.