தமிழகத்தில் நாளை (டிச.2) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளை இப்பதிவில் காண்போம்.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் எடுத்து வருவதால் ஆங்காங்கே மின் கசிவு ஏற்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. சென்னையில் ஒரு வார காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மின் கம்பங்கள் சேதம் ஏற்பட்டு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் மின் ஊழியர்கள் மின்கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் தவறாது மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
TCS வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – தொழில்வல்லுநர்களுக்கு 15 நாட்கள் இலவச ஆன்லைன் பயிற்சி!
மின் பராமரிப்பின் போது மின் கம்பங்களின் அருகே மின் விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட்டு மின் பாதைகள் சரி செய்யப்படுகிறது. இதன் மூலம் மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. மேலும் மின் பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பிகள், வயர்கள் மாற்றம் செய்யப்பட்டு மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து நாளை (02.11.2021) கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு? ஓமைக்ரான் அச்சம் எதிரொலி!
அதனால் சேத்துமடை, அண்ணாநகர், வேட்டைக்காரன்புதூர், தம்மம்பதி, ஒடையகுளம், தேவிபட்டினம், சரளைப்பதி ஆகிய பகுதிகளில் டிசம்பர் 2ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. இந்தனை கருத்தில் கொண்டு மின் பயனர்கள் மின் சார்ந்த பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ளலாம்.