தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு அலகுத்தேர்வு தொடக்கம் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

0
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு அலகுத்தேர்வு தொடக்கம் - முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு அலகுத்தேர்வு தொடக்கம் - முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு அலகுத்தேர்வு தொடக்கம் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உயா்நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் டிசம்பர் 17 ஆம் தேதி முதல் அலகுத் தோ்வுகள் தொடங்கவுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தெரிவித்துள்ளார்.

அலகுத்தேர்வு:

தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ளதை அடுத்து கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 – 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அடுத்த கட்டமாக 1 – 8 வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கள் கேட்டறியப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டு நவம்பர் 1 முதல் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளும் திறக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

ஜன.14 வரை முழு ஊரடங்கு அமல் – டிச.20 முதல் கிறிஸ்துமஸ் விடுமுறைகள் துவக்கம்! அரசு அறிவிப்பு!

கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் கட்டாயம் இந்தாண்டு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டங்களை பள்ளி கல்வி ஆணையர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பட்டுள்ளது.

TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் – முக்கிய விவரங்கள் இதோ!!

2021-22ம் கல்வியாண்டில் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சுமையை குறைக்க பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அம்மாவட்டத்தில் உள்ள உயா்நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் டிசம்பர் 17 ஆம் தேதி முதல் அலகுத் தோ்வுகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். 50 மதிப்பெண்களுக்கு ஒன்றை மணி நேரம் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். தேர்வானது டிசம்பர் 24 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான மாணவா் பெயா்ப்பட்டியலை இறுதி செய்யும் பணி ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!